Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Friday, December 11, 2009

நன்றி மக்கா



பத்து நாட்களாகப் பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை. ஆனாலும், தொடர்ந்து மெயிலனுப்பி விசாரித்த நண்பர்களை எனக்குத் தந்த இந்தப் பதிவுலகிற்கு மிக்க நன்றி.

சுசி அழைத்திருந்த ஒரு தொடர் பதிவு ரொம்ப நாளா பெண்டிங். இன்னிக்கு அதை முடிச்சிடுவோம்.
நான் பதிவெழுத வந்த கதை. (எழுதுற கொடுமை போதாதுன்னு அதை எப்படி எழுத வந்தன்னு கதை வேறவான்னு மனசுக்குள்ள திட்டாதீங்க மக்கா....)

பதிவெழுத நான் ஆரம்பித்தது மார்ச் 2008. நான் தமிழை மிகவும் இழந்த நேரமது. தமிழ்ப் பேச்சு, நண்பர்கள், புத்தகங்கள் என எதுவுமில்லாமல் ஆங்கிலமே தாய் மொழியாகி விடுமே என்ற அச்சம் கொண்ட நேரத்தில் நண்பர் செல்வேந்திரனின் பதிவுகள் படிக்க நேர்ந்தது. அவர் பதிவுகளை பல நாட்களாக வாசித்து வந்த நிலையில், சரி நாமும் எழுத முயற்சிக்கலாமே என்ற எண்ணத்தின் உருவாக்கமே vigneshwari.blogspot.com. அப்போது தோழியின் காதல் பிரிவு நிகழவே அதை வைத்து எனக்குத் தெரிந்த எளிமையான வார்த்தைக் கோர்வைகளுடன் எழுதப்பட்டதே என் முதல் பதிவு. ஆனால் அதற்குப் பின் இரண்டு மாதங்களுக்கு ஒன்றும் எழுதவில்லை. அப்போதெல்லாம் பதிவுலக வாசிப்பு மிகக் குறைவு.

பின் ஆணிகள் இல்லாத நாளொன்றில் வெட்டியாக ஒரு பதிவை ஜூலையில் எழுதினேன். அதற்குப் பின் வேலை, வெளியூர் பயணம் என தொடர் காரணங்களால் பதிவுலகை மறந்து போனேன். இதற்கு நடுவே திருமணமாகி மொத்த பஞ்சாபியாக மாறிய பின், தமிழை இழந்து விட்ட வேதனை அதிகமாகியது. அப்போது தான் நிறைய நண்பர்களின் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். எப்படியெல்லாம் எழுதலாமென்ற ஐடியா கிடைத்தது. எழுத ஆரம்பித்து என்னவெல்லாமோ கிறுக்கித் தள்ளினேன். என்னாலே சகிக்க முடியாமல் போன போது அதை மாற்ற முயற்சித்தேன்.

இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக எழுதக் கற்று, எல்லாரும் இருநூறு, ஐநூறு என போய்க் கொண்டிருக்க நான் ஐம்பது பதிவுகள் மட்டுமே ஒப்பேத்தியுள்ளேன்.

எழுத ஆரம்பித்தது தமிழைத் தக்க வைக்க மட்டுமே. ஆனால், பதிவுலகம் எனக்குப் பல விலைமதிக்க முடியாத நண்பர்களைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கவுமில்லை. இப்போது பல நாடுகளில், பல மாநிலங்களில், பல ஊர்களிலிருந்து நட்புகள் இந்தப் பதிவுலகத்தின் மூலம் கிடைத்துள்ளன. அந்த நட்புகளின் பாராட்டுகளாலும், விமர்சங்னகளாலும் தான் இன்னும் எழுதும் ஆர்வம் குறையாமல் போய்க் கொண்டுள்ளது. ஆனாலும், எழுத நேரம் தான் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரங்களில் எனது மொக்கைப் பணியை செவ்வனே செய்து வருகிறேன்.
(இதை நீ சொல்லித் தான் தெரியனுமா...) நண்பர்களும் தவறாமல் பின்னூடங்களில் ஊக்கமளித்து வருகிறீர்கள், திட்டுகிறீர்கள், பாராட்டுகிறீர்கள். அதுவே நல்ல எழுத்தை என்னிலிருந்து இன்னும் கொண்டு வரும் என நம்புகிறேன். (விதி வலியது)

பதிவுலகம் பற்றி எழுதும் இந்த நேரத்தை மிக நெகிழ்ச்சியாகவே உணர்கிறேன். நண்பர்களின் அங்கீகாரங்கள் பின்னூட்டங்களாகவும், தொடர் பதிவுகளாகவும், மின் மடல்களாகவும், விருதுகளாகவும் என்னை வந்து சேர்ந்ததில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நன்றி மக்கா.

சுசி - என் வரலாறு உங்க அளவுக்கு இல்லைங்க. நான் எப்போவுமே வரலாறுல வீக். இப்போ இந்த வரலாறைத் தொடர நான் அழைப்பது Scribblings வித்யா.
மோகன் குமார் - தனிப் பதிவெழுதி என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றி.
கோபிநாத் - விருதுகளுக்கு நன்றி கோபி. வாங்கின விருதை இவர்களுக்கெல்லாம் அளிக்கிறேன்.

ஏற்கனவே வாங்கியிருந்தாலும் பரவாயில்ல. இன்னொன்னும் சேர்த்து வெச்சுக்கோங்க.

சுசி - மின்னும் நகைச்சுவைக்காக.
நேசமித்திரன் - நிறைய யோசிக்க வைப்பதற்காக.
குறும்பன் - குறும்பு தெறிக்கும் எழுத்திற்காக.

மறுபடியும் நன்றி மக்கா.
அடுத்த வாரம் திருப்பூரிலிருந்து சந்திக்கிறேன்.

Monday, November 9, 2009

நானும் எழுதிட்டேன்

போன வாரம் முழுக்க பதிவுலகின் முக்கியப் பதிவாக இருந்த "பிடித்தது, பிடிக்காதது" இந்த வாரம் எனக்கும். ஐந்து அதி முக்கிய நண்பர்கள் அழைத்திருக்கும் காரணத்தால் இதோ எனது "பிடித்ததும், பிடிக்காததும்"

அழைத்த நண்பர்கள் ராஜன், நாஸியா, அம்மிணி, ரோமியோபாய், பா.ராஜாராம் - அனைவருக்கும் என் நன்றிகள்.

எல்லாரும் போட்ட மாதிரியே நாமளும் போட்டாச்சு விதிகள்.

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நானே தமிழ்நாட்டுக்குள்ள இல்ல, பிடிச்சவங்க மட்டும் தமிழ்நாட்டுலே இருக்கனுமா...)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம் (இது வேறவா.... இன்னும் யாராவது மிச்சம் இருக்காங்க இதை எழுதாம...)

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். (பிரபலமாக்கிடலாம்) அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம். (இது தப்பில்லையோ...)

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம். (தாண்டாது.... தாண்டாது.)

5. நீங்கள் குறிப்பிடும் பிரபலம் உயிருடன் இருக்க வேண்டும். (மறைந்த சாதனையாளர்களை மறத்தல் தகுமோ...)

இப்போ கேள்விகளுக்குள்.

1.அரசியல் தலைவர்
பிடித்தவர் : தமிழ்நாட்டுக்குள்ள யாருமில்ல.
பிடிக்காதவர்: தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அனைவரும்.

2.எழுத்தாளர்
பிடித்தவர் : பாலகுமாரன். (பலருக்கும் பிடிக்காதவரெனினும் காதலை அவர் சொல்லும் அழகுக்காகப் பிடிக்கும்)
பிடிக்காதவர்: முன்னாடி தேவியின் நாவல் புத்தகம் ஒன்னு வரும். (இப்போ வருதான்னு தெரியல.) அதுல எழுதுறதா சொல்லுற எல்லோரையும்.

3.கவிஞர்
பிடித்தவர் : வைரமுத்து. (அவரின் வைர வரிகளுக்காக.)
பிடிக்காதவர்: வாலி

4.இயக்குனர்
பிடித்தவர் : மணிரத்னம், ராதா மோகன்
பிடிக்காதவர்: சேரன்

5.நடிகர்
பிடித்தவர் : கமலஹாசன்
பிடிக்காதவர்: பரத்

6.நடிகை
பிடித்தவர் : பாவனா
பிடிக்காதவர்: தமனா

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர்: தேவிஸ்ரீ பிரசாத்

8. நகைச்சுவை நடிகர்
பிடித்தவர் : வடிவேலு
பிடிக்காதவர்: வெண்ணிற ஆடை மூர்த்தி

9. வில்லன் நடிகர்
பிடித்தவர் : ரகுவரன் (ஐயோ அவர் இப்போ இல்லையா....), பிரகாஷ் ராஜ்.
பிடிக்காதவர்: ஆஷிஷ் வித்யார்த்தி. (உங்களுக்கு நடிப்பே வரல. இதுல வில்லத் தனம் வேறையா.... ஐயோ, ஐயோ...)


அப்படியே நம்மையும் மதிச்சு விருது குடுத்த விதூஷ் வித்யாவிற்கு நன்றிகளும்.




அப்படியே இந்த தொடரை கண்டின்யூ பண்ண நண்பர் செல்வேந்திரனையும், தோழி விதூஷ் வித்யாவையும் அழைக்கிறேன்.

Wednesday, October 14, 2009

நன்றி நண்பர்களே

சில வேலைகளின் காரணமாக நாற்பது நாட்கள் ப்ரேக்கிற்குப் பின் போன வாரம் தான் எழுத வந்தேன். இதற்காக மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்த நண்பர்களே, முடிந்தது உங்கள் மகிழ்ச்சி. இனி வாரத்திற்கு ஒரு போஸ்டாவது எழுத வேண்டும் என நினைத்துள்ளேன். முடிகிறதா எனப் பார்ப்போம்.

இடைப்பட்ட நேரத்தில் எனக்கு விருது கொடுத்து மகிழ்ச்சிப்படுத்திய சுரேஷ் மற்றும் இயற்கை ராஜிக்கும், தொடர் பதிவிற்கு அழைத்த அரங்கப் பெருமாள் அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் காலம் தாழ்த்தி எழுதுவதற்கு Sorry.

சுவாரசியப் பதிவர் விருதிற்கு நன்றி சுரேஷ். நீங்களும் சுவாரசியப் பதிவர் என்பதால் என் சார்பாக இந்த விருது உங்களுக்கும்
.

நட்பு விருதிற்கு நன்றி இயற்கை ராஜி. இந்த விருதை உங்களைத் தவிர வேறு யாருக்குத் தந்தால் தகும். அதனால் என்னிடமிருந்து உங்களுக்கும்.

அரங்கப் பெருமாள் அவர்கள் அழைத்த தொடர்பதிவு.
உங்கள் விதிகளை மீறுவதற்காக மன்னிக்கவும். அதிக நாட்களாகி விட்டதால் நான் யாரையும் அழைக்கவில்லை.

1. அன்புக்குரியவர்கள் : பழகிய அனைவரும்.
2. ஆசைக்குரியவர் : எப்போதும் என்னவர்.
3. இலவசமாய் கிடைப்பது : எதுவுமேயில்லை.
4. ஈதலில் சிறந்தது : கல்வி.
5. உலகத்தில் பயப்படுவது : என்னைத் தவிர யாருக்குமில்லை.
6. ஊமை கண்ட கனவு : ஊமை ப்ளாக்கராக இருந்தால் கனவை ஊருக்கே சொல்லலாம்.
7. எப்போதும் உடனிருப்பது : புன்னகை.
8. ஏன் இந்த பதிவு : அரங்கப் பெருமாள் அழைத்ததால்.
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : நோயில்லா வாழ்வு.
10. ஒரு ரகசியம் : அப்படி எதுவும் என்னிடமில்லை.
11. ஓசையில் பிடித்தது : புல்லாங்குழல் இசை.
12. ஔவை மொழி ஒன்று : பிச்சை புகினும் கற்கை நன்றே.
13. அஃறிணையில் பிடித்தது : அவசியமான அனைத்தும்.



1. A – Available/Single? : Married and Available only for Mr. 'Y'.
2. B – Best friend? : My Diary.
3. C – Cake or Pie? : Cake.
4. D – Drink of choice? : Cappuccino.
5. E – Essential item you use every day? : Tooth Brush.
6. F – Favorite color? : Pink.
7. G – Gummy Bears Or Worms? : Nothing.
8. H – Hometown? : Srivilliputtur.
9. J – January or February? : Of course, January. Because of my arrival to this great world.
10. K – Kids & their names? : Only me as of now. :)
11. L – Life is incomplete without? : Friends and Feelings.
12. M – Marriage date? 06 September.
13. N – Number of siblings? 1 Sweet sister.
14. O – Oranges or Apples? Apples.
15. P – Phobias/Fears? Technophobia.
16. Q – Quote for today? : Everyday is blessed. Enjoy it.
17. R – Reason to smile? : Always smile to others without any reason to make the day light and sweet.
18. S – Season? : Winter.
19. T – Tag 4 People? : Sorry Aranga Perumal Sir.
20. U – Unknown fact about me? : Who knows it??
21. V – Vegetable you don't like? : Nothing came to mind.
22. W – Worst habit? : Nothing as such.
23. X – X-rays you've had? : Don't remember exactly.
24. Y – Your favorite food? : Anything edible (Preferably Vegetarian).

I & Z ஏன் மிஸ் பண்ணிட்டீங்க சார்..