
எனது காதலையெல்லாம்
காகிதத்தின்
ஒற்றைப் பக்கத்தில்
கவிதையாக்க முயற்சித்த
காலங்கள்
பயணங்களின் போதும்
கைப்பிடித்து
தோள் சாய்ந்து உறங்கிய
பிரியாத நெருக்கங்கள்
பொய்யாய் எனக்கு வந்த
வயிற்று வலிக்கெல்லாம்
நீ எடுத்த விடுப்புகள்
அலுவல்கள் அதிகமென்றாலும்
தவறாமல் உன்னிடமிருந்து வந்த
அலைபேசி அழைப்புகள்
நீ கொடுத்த
பரிசுப் பொருட்களைச் சுற்றி வந்த
காகிதத்தைக் கூடக்
கசங்காமல் மடித்து வைத்து
சேமித்து வைத்த காலங்கள்
உன் பெயர்
எழுதியெழுதியே
மை தீர்ந்த பேனாக்கள்
எல்லாம் அடங்கிவிட்டன
இந்த ஐந்து வருடத் திருமண வாழ்வில்
உனக்கான அலுவல்களில் நீயும்
எனக்கான வேலைகளில் நானும்
மூழ்கிப் போய் விட்டாலும்
அமைதியாய் அழகாய்
ஆழப் பதிந்து விட்டது
உன் மீதான அன்பு மட்டும்!
நான் கிறுக்குறது பத்தாதுன்னு கிறுக்க ஆர்வமிருக்குற எல்லாரையும் ஊக்குவிச்சுட்டு இருக்கேன். ஆயிரம் பேரை மண்டை காய விட்டாத் தான் அரைக் கவிஞர் ஆக முடியும். (ப்ளாக் மொழி) மேலே உள்ள வரிகள் என் தோழியொருத்தியின் முயற்சி, உங்கள் கருத்துகளுக்காக இங்கே.