எனது இந்த வெறுப்பை அறிந்தும் அம்மா தொடர்ந்து ஒரு வருடமாக “குமுதம்-சிநேகிதி” வாசிக்க சொன்னார். வேண்டா வெறுப்போடும், அம்மாவின் மீதான மரியாதையின் காரணமாகவும் போன வாரம் வாங்கி வந்தேன். வாங்கி வந்ததற்கு உள்ளே என்ன தான் இருக்கிறதெனப் பார்க்கலாமெனப் புரட்டினேன். முடித்து விட்டுத் தான் கீழே வைத்தேன். நான் அபத்தம் என நினைக்கும் விஷயங்கள் இல்லை. தவிர பயனுள்ள பல விஷயங்கள். ரொம்பவே பிடித்து விட்டது. அம்மாவிற்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன்.
சரி, சிநேகிதிக்கு வரலாம். நான் வாசித்தது மார்ச் 1-15 வரையிலான இதழ். வாங்கும் போது 30 வகை ரொட்டி என இலவச இணைப்பைக் கடை பையன் நீட்ட, வேண்டாம் என மறுத்து விட்டு வந்தேன். புத்தகத்தில் தரம் இருப்பதாக நம்புபவர்களுக்கு எதற்கு இந்த இலவச இணைப்புகள் என்பதென் எண்ணம். பெண்கள் சிறப்பு இதழென்பதால் முதல் இருபது பக்கங்களுக்கு வெவ்வேறு துறைப் பெண்கள் பற்றிய ஒரு/இரு பக்கக் கட்டுரைகள். போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி, கலெக்டர், கோவில் கருவூலத்தில் இருக்கும் பெண், காய்கறி விற்று மருத்துவமனை கட்டிய பெண், பாடகி, புல்லாங்குழல் இசைக்கும் பெண், ஒரு குடியிருப்பில் விட்டு வேலை செய்யும் அம்மா என வித்தியாசமான பெண்கள் பற்றிய தொகுப்பு சுவாரசியம்.
உள்ளே சமையல் குறிப்பில்லை; பதிலாக அத்தியாவசிய உணவுப் பழக்க வழக்கங்கள். காஸ்மெடிக் அழகுக் குறிப்பில்லை; மாறாக உணவால் அழகாவது எப்படி. அழும், ஆறுதல் சொல்லும் சோகக் கதைகள் இல்லை; பெண்களே கருத்து சொல்லும் விவாத மேடை. இத்துடன் டாக்டர்.ஷாலினியின் அவசியமான கட்டுரை ஒன்று. வாசித்து முடித்து விட்டு அம்மாவை அழைத்து நன்றி சொன்னேன். தங்கையையும் ரெகுலராக வாசிக்க சொன்னேன். சிநேகிதியில் கொஞ்சம் அலுப்பான வுஷயம் சுய விளம்பரம். ஒருவரைப் பற்றி எழுதும் போது கூடவே “இவரும் நம் வாசகி” என சொல்வது சலிப்பாக உள்ளது. மற்றபடி ரொம்பவும் நல்லாருக்கு. (இது வெறும் புகழ்ச்சி அல்ல. 20 ரூபாய் வீணாகாததன் மகிழ்ச்சி)
*************************************************************************************************************
போன முறை திருப்பூர் சென்றிருந்த பொழுது நான் இருந்த கான்ஃபரன்ஸ் ஹாலில் மெல்லிய பாட்டு சத்தம் கேட்டது. அங்கிருந்தவரை அழைத்து விபரம் கேட்க, இது HR பாலிஸிகளில் ஒன்று. இது போல் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்வதால் தொழிலாளர்களுக்கு அயற்சி ஏற்படாமல் இருப்பதாகவும், வேலை செய்ய ஆர்வம் அதிகமாவதாகவும் தெரிவித்தார். அங்கிருந்த ஒரு கன்சல்டண்டைக் கேட்ட போது அது உண்மைதானென உறுதி செய்தார். எனக்கும் நன்றாகவே இருந்தது. ஆனால் இது அட்மினிஸ்ட்ரேடிவ் ப்ளாக்கில் மட்டும் இருப்பதாக சொன்னார்கள். மனதிற்குள் ஒன்று நினைத்துக் கொண்டு சொல்லாமல் வந்து விட்டேன். (வேலை செய்பவர்களுக்காகப் பாடலென்றால் அவசியம் ஷாப் ஃப்ளோரில் தானே இருக்க வேண்டும். நாற்காலியில் கம்ப்யூட்டரை வெறித்துக் கொண்டு தூங்குபவர்களுக்கு எதற்கு)
*************************************************************************************************************
*************************************************************************************************************
*************************************************************************************************************
*************************************************************************************************************