
மூத்தப் பதிவர் கேபிளாரின் தகப்பனார் மறைவிற்கு என் அஞ்சலியும், பிரார்த்தனைகளும். அவருக்கு வேண்டிய பொழுதில் கேட்காமலேயே ஓடோடி உதவிய மற்ற பதிவ நண்பர்களை எண்ணி வியக்கிறேன். நானும் பதிவர் ஜாதி என சொல்வதில் மகிழ்ச்சி. கேபிள் சார் நீங்கள் சீக்கிரம் இத்துயரிலிருந்து மீள மனமார பிரார்த்திக்கிறேன். சமீபத்தில் சகோதரரை இழந்த அரங்கப் பெருமாள் சார், நீங்களும் அத்துயரிலிருந்து மீள என் பிரார்த்தனைகள்.
****************************************************************************************************
நவம்பர் மாதம். டெல்லியில் குளிர் ஆரம்பமாகி விட்டது. நான்காண்டுகளுக்கு முன்பு டெல்லியில் அக்டோபரிலேயே ஸ்வெட்டருடன் நடுங்கிக் கொண்டிருந்தேன். இந்த முறை நவம்பர் பதினைந்துக்கு மேல் தான் ஆரம்பமென்றாலும் குறைவில்லாமல் நடுங்க வைக்கிறது. இன்னர் தெர்மல் வியர், ஜீன்ஸ், திக் டாப்ஸ், ஸ்வெட்டர், அதற்கு மேல் ஜாக்கெட், தலைக்குக் குல்லா, காலில் சாக்ஸ், ஷூ, கையில் கிளவுஸ், இது எல்லாவற்றிற்கும் மேல் ஷால் என ஒரு ரேஞ்சாகத் தான் ஆபிஸ் வர வேண்டியுள்ளது. இப்போதே இப்படியென்றால் டிசம்பர், ஜனவரியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் அலுவல் வேலைகளால் இங்கிருந்து தப்பித்து வருகிறேன். இவ்வருடம் எப்படியோ...
இதற்கு நடுவே டெல்லி வந்திருக்கும் கோவைத் தோழியை இரண்டு நாட்கள் முன்னர் அழைத்து "எப்படி டெல்லிக் குளிர்" என்றேன். "கோயம்பத்தூர் மாதிரி தான் இருக்கு. ரொம்ப அதிகமில்லை" என்றார். இன்று கேட்க வேண்டும் "கோவையில் எப்போது இப்படி நடுங்கினீர்கள் என்று. (கோவை சொர்க்கம். அங்கு உடலை வருத்தும் குளிருமில்லை, வாட்டும் வெயிலுமில்லை. இது தலைநகரம் :( )
****************************************************************************************************
டெல்லியின் சாலைகளை நினைத்து மகிழும் அதே நேரத்தில், நொய்டாவின் சாலைகளை நினைத்தால் எரிச்சலே மிஞ்சும். ஆங்காங்கே உடைந்த ரோடுகள், பழுதான டிராபிக் சிக்னல்கள் என தலைவலிகள் அதிகமிங்கு. எனக்குத் தெரிந்து ஒரு டிராபிக் லைட் கடந்த ஐந்து மாதங்களாக ஒரே சிக்னலைக் காட்டிக் கொண்டுள்ளது. இதனால் ஒரு பக்கத்து வாகனங்கள் எப்போதும் இரண்டு நிமிடம் நின்று பின் சிக்னல் பழுதானதை உணர்ந்து செல்கின்றன. ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக இது சரிபடுத்தப்படவே இல்லை. இது குறித்து யாரிடம் புகார் கொடுக்க வேண்டுமென்றும் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன். இந்த முறை நானே புகாரளிக்கப் போகிறேன்.
சாலைகளில் எனது அடுத்த தலைவலி, ஹார்ன் சத்தம். அடைக்கும் சாலை நெரிசலில் ஆம்புலன்ஸ் சத்தம் போல ஹார்ன் வைப்பவர்கள், அலறும் ஹார்ன் ஒலிப்பவர்கள், பைக்கில் சைலென்செர் இல்லாமல் ஓட்டுபவர்கள் இவர்களையும் ஒலி மாசுபடுத்துபவர்களாக புகாரளிக்க வேண்டும். என்ன நான் சொல்றது... (எங்க ஊருக்கு தான் இப்போ மெட்ரோ வந்துடுச்சே. இனிமே, சாலைப் போக்குவரத்து உபயோகம் குறையும்)
****************************************************************************************************
நம்ம வால் சொன்ன மாதிரி எல்லாத்துக்கும் கேள்வி கேட்டுப் பழகலாமின்னு, சேட் பண்ண தோழிகிட்ட கேள்வி கேக்க ஆரம்பிச்சேன். அவ வெறுத்துப் போய்ட்டா. அப்படி ஒன்னும் தப்பா நான் கேட்கலையே. நீங்க சொல்லுங்க, நான் எதுவும் தப்பாவா கேட்டேன்... Hi de, How is ur hubby babe..
Is my hubby a babe for you?
Hey stupid, U r babe. And how is ur hubby?
Haiyaa, I am a little babe??? Thank you Aunty.
Hey, I am unborn de.
So, Am I speaking to a devil?
Hey, I mean to say I am very young.
So, nee Araikuraiyaa?
.................
Ennachu chellam, Mouna virathamaa?
Offline போய் விட்டாள்.(வால், கேள்விகள் கேக்கனும்னு சொன்னீங்க. விளைவுகள் என்னன்னு சொன்னீங்களா...)
****************************************************************************************************
எனக்குக் கார்களின் மீது எப்போதும் அலாதிப் பிரியமுண்டு. பெரும்பாலான கார்ப் பிரியர்களைக் கவர்பவை பெரிய வண்டிகள் தான். எனக்கும் தான். ஆனால் இப்போது இரண்டு சிறிய கார்கள் எப்போதும் என் கண்களை அவற்றின் பக்கம் திரும்ப வைக்கின்றன. கொள்ளை அழகாய் எனக்குத் தெரிகின்றன. Skoda Fabia & Honda Jazz. சிறிய கார்ப் பிரியர்களை மட்டுமலாது பெரிய கார்ப் பிரியர்களையும் ஈர்க்கும் இது போன்ற வடிவமைப்புகள் மனதை கொள்ளை கொள்கின்றன. (இதை என்னவர் கிட்ட சொன்னா மட்டும் காதிலேயே வாங்கிக்க மாட்டேங்குறார். Is it called husband reaction?)
****************************************************************************************************
யோகி டைம்ஸ்
நான் ஏற்கனவே சொன்னது போல என்னவரின் தமிழார்வம் அதிகமாகிக் கொண்டே போகிறது. போனில் அம்மாவின் பயிற்சியும், வீட்டில் என் பயிற்சியும் அவரை (அவரின் தமிழை) ஒரு ஷேப்பாக்கி வைத்திருக்கின்றன. போன வாரம் 'தமிழன்' படம் பார்த்துக் கொண்டிருந்தோம். 'ஹாட் பார்ட்டி' பாடல் வந்ததும் என்னிடம், "பிரியங்கா சோப்ரா நல்லா தானே இருக்கா. அவன் ஏன் 'பாட்டி'ன்னு பாடுறான்" அப்படினார்.'அய்யா, தமிழார்வம் உங்களுக்கு இவ்ளோ அதிகமாகக் கூடாது' என்றவாறே 'அது பாட்டி இல்ல, பார்ட்டி' என்று விளங்க வைத்தேன். இந்தத் தமிழ் பயிற்சி என் தமிழை வளர்க்கப் போகிறதா இல்லை, மறக்கடிக்கச் செய்யப் போகிறதாவெனத் தெரியவில்லை. (இப்போது எழுத்துக்களை எழுதப் பழக ஆரம்பித்துள்ளார். என்னென்ன கமெண்ட்ஸ் வரப் போகுதோ)