Showing posts with label துணுக்ஸ். Show all posts
Showing posts with label துணுக்ஸ். Show all posts

Sunday, March 27, 2011

Our Moms always rock

ஒரு மாதம் அம்மா வீட்டில். வருடம் இப்படி ஒரு மாதம் கிடைத்தால் நன்றாகத் தானிருக்கும். ஆனால் எப்போதும் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போக வேண்டுமெனவா பிரார்தித்துக் கொள்ள முடியும்.. ஒவ்வொரு பயணமும் தூக்க முடிந்த பெரு மூட்டையளவு அனுபவங்களைத் தருகிறது. அவைகளுக்கு இப்பயணத்திலும் குறைவில்லை.

இப்பயணத்தின் எதிர்பாரா சந்திப்பு கவிஞர் நேசமித்திரனுடனானது. "ஹலோ, சொல்லுங்ண்ணே..” என அவர் பேசிப் பார்க்கையில் அவர் எழுத்தையும் பேச்சையும் இணைத்துப் பார்த்து வரும் மிரட்சி முதன்முறை பார்க்கும் யாருக்கும் வருவதுண்டு. அப்படி ஒரு எளிமையான நட்பான மனிதர். பதிவ நண்பர் சிவாவையும், கூடவே தோழியையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு நேசமித்ரனுடன் ஆண்டாள் கோவிலடைந்தோம்.

நான் நடை பயின்றதே ஆண்டாள் கோவில் பிரகாரத்தில் எனலாம். தடுக்கி விழுந்தால் கோவிலென ஆண்டாள் கோவில் என் வீட்டு முற்றமாயிருந்த காலமுண்டு. நேராகப் போய் ஆண்டாளின் அழகில் மயங்கி எழுந்து வருவதே பெருங்காரியம். ஆனால் அழகு ஆண்டாளிடம் மட்டுமல்ல, அக்கோவிலின் ஒவ்வொரு தூணிலுமென சொல்லிக் கற்றுத் தந்தார் கவிஞர்.

அவர் சொல்லச் சொல்ல இத்தனை நாளாய் இவையெதையும் கண்டுணராத குற்றவுணர்ச்சியும், அவர் சொல்லும் விஷயங்களின் ஆழமும் புதுமையும் அவை மீதான சிறுபிள்ளைத் தனமான சந்தேகங்களுமென ஒரு கலக்கல் மாலை அனுபவம்.

முதன் முறையாக கற்சிற்பங்களின் அழகில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக லயித்திருந்தேன். ஒவ்வொரு விஷயத்திலுமிருக்கிற கற்றலை அவர் மூலமறிய முடிந்தது. மதுரை சாயலில் பேசிக்கொண்டேயிருக்கையில் இலக்கியம் பேசுகிறார்; கவிதை கிறுக்குகிறார். ஒரு மனிதன் ஒரு நாளைக்குக் கவிதையுடன் எவ்வளவு நேரம் வாழ முடியும். இவரின் ஒவ்வொரு வினாடியும் கவிதையுடனேயே ஆரம்பித்து முடிகிறது. கொஞ்சம் மிரட்சியுடனும் அதிக மரியாதையுடனுமே அவர் பேச்சுகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். என்னை விட அதிகமான ஆழ்ந்த சிந்தனையில் இருந்த சிவா அடுத்து ஒரு நாள் முழுக்கக் கவிஞர் பற்றியும் அவரிடம் விவாதித்த விஷயங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். (கவிஞன்யா!)
*************************************************************************************************************

ஏற்கனவே யோகிக்கும் எனக்கும் புத்தக அலமாரியால் வரும் சண்டைகளுக்குப் பஞ்சமில்லை. அவரது தடிமனான என்சைக்ளோபீடியாக்களும், டெக்ஸ்டைல் மற்றும் ஐடி ரெஃபெரென்ஸ் புத்தகங்களும் அவற்றின் பரிமாணங்களையொத்த நாவல்களுமென ஆறடுக்கு அலமாரியின் நான்கடுக்குகளை எடுத்துக் கொண்டு விட்டார். மீதியிருக்கும் என் இரு அடுக்குகளிலும் அவ்வப்போது வாடகைக்கு அவர் புத்தகங்கள் அடைக்கப்பட்டிருக்கும். அவற்றை எடுத்து த்ரோபால் விளையாடுவது என் பொழுதுபோக்காக இருந்து வந்தது. இனி அது முடியாதெனும் அளவுக்கு அவ்வடுக்குகளை நிறைக்க புத்தகங்களை ஊரிலிருந்து வாரி வந்துள்ளேன். நான் வாங்கிய புத்தகங்கள் போதாதென நண்பர்களிடமிருந்தும் பரிசாகப் புத்தகங்கள். மொத்தம் பதினைந்து கிலோவுக்கு. இனி யோகி ஒரு துண்டு காகிதம் வைக்க வேண்டுமென்றாலும் கூட இடமில்லை.
(வழக்கம் போல வாங்கிட்டு வந்தாச்சு. வாசிக்கறது எப்போதுன்னு தான் தெரியல..)

*************************************************************************************************************

சென்னை - எனக்கு மிகப் பிடித்த ஊர். காரணம் இதுதானெனக் குறிப்பிட்டுச் சொல்ல சிறுவயதிலிருந்து தெரியவில்லை. எல்லோருமாய் குடும்பத்துடன் மஹாபலிபுரம் போனோம். அங்கே இந்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 ரூபாயெனவும், வெளிநாட்டவருக்கு 250 ரூபாயெனவும் எழுதப்பட்டிருந்தது. நான் பார்த்த வரையில் இம்மாதிரியான கட்டண வித்தியாசம் எல்லா இந்திய நகரங்களிலும் உள்ளது.
உடனிருந்த அங்கிள் டிக்கெட் கொடுப்பவரிடம் கேட்டார்..
“ஏங்க, நமக்கு மட்டும் 10 ரூபா.. வெளிநாட்டுக்காரங்களுக்கு 250?”
பதில் சொன்னவர் தெரியாதென சொல்லியிருக்கலாம் தான். ஆனால் அவர் சொன்ன பதில்...

“ஏன்னா அவங்க வெளிநாட்டுக்காரங்க”
”போயாங்......” மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............

*************************************************************************************************************

இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தது போல் பதிவுலகம் அதிக உற்சாகத்துடனும், சுவாரஸ்யப் பதிவுகளுடனும் இனி எப்போதிருக்கும் என்ற ஏக்கமும் கேள்வியும் தொக்கி நிற்கின்றன. ஒரு வேளை பதிவுலகம் அப்படியே தானிருக்கு, நான் தான் எழுதலையோங்கற கேள்வியும் அடிக்கடி வந்து போகுது. ரெண்டும் தான்னும் தோணுது. ஏன்.. ஏன்... அப்படின்னு கேள்வி உள்ளுக்குள்ள எக்கோ ஆகறதுக்கு முன்னாடி வாசிப்பு அதிகரிக்கையில் எழுத்து குறையுமெனும் தர்க்கமும் வருது. இல்ல, யஹூ, ஆர்குட், ஃபேஸ்புக் மாதிரி ப்ளாகும் சீசனல் தானான்னும் தெரியல. இருந்தாலும் அடிக்கடி நிகழும் பதிவர் சந்திப்புகளும், வாசித்த புத்தகங்கள் மனதிற்குள் ஏற்படுத்தும் தாக்கமும் ப்ளாகை இன்னும் கொஞ்ச நாட்கள் கொண்டு போகுமெனத் தோன்றுகிறது. (எழுதாம இருக்கற சோம்பேறித்தனத்துக்கு என்னெல்லாம் சாக்கு..)

*************************************************************************************************************

மெயிலில் ரசித்தது:

2011 வேர்ல்ட் கப்பை இந்திய அணி 100% நிச்சயம் ஜெயிக்கும். ஏன்னா...


















virenderR shewag
sachin tendulk
Ar
yuvra
J singh
gaut
Am gambhir
yusuf patha
N
ms dhon
I
virat
Kohli
harbh
Ajan singh
zaheer kha
N
s sreesan
Th
r as
Hwin

(எப்படியெல்லாம் யோசிக்குறாய்ங்க :) )

*************************************************************************************************************

அம்மாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கையில் தங்கை என்ன செய்கிறாளெனக் கேட்டேன்.
அம்மாவின் பதில் “அவ சங்கீத பரம்பரைல இருந்து வந்திருக்காள்ல. அதனால காலைல எழுந்ததுல இருந்து காலேஜ் போற வரை டிவி அல்லது சிடி ப்ளேயர்ல பாட்டு ஓடணும். சாயங்காலம் காலேஜ்ல இருந்து வந்ததுல இருந்து படுக்கப் போற வரைக்குமும் அதே தான்.”
பாட்டுக் கேக்கறது குத்தமாய்யா.. எப்போதோ வாசித்த ஒரு குறுஞ்செய்தி நினைவிற்கு வந்தது.

அம்மாக்கள் குழந்தைகள் இரவு படுக்கப் போகும் முன்:

England Mom: Good Night Dear
Gujrathi Mom: Shubh Raat Beta
Pakistani Mom: Shaba Khair
Tamil Mom: நான் அந்த மொபைலை தூக்கி அடுப்புல போடப் போறேன் பாரு. தூங்கப் போறியா இல்லையா.. (Our moms always rock. :) )

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழைய எத்தனித்த பொழுது வழக்கமான சாவி தேடும் படலம் ஆரம்பமானது. யோகி உதவுவதாய் ஹேண்ட்பேக்கைப் பார்வையிட்டார்.
ஒரு அலட்சியப் பார்வையுடன், “Its not that easy to find something from a lady's purse" என்றவாறே அவர் பக்கமிருந்து பையை என் பக்கமிழுத்தேன்.
சட்டென்று சாவியை எடுத்து விட்டுச் சொன்னார் “For that you need to have a man's eye"
(அட! )

Wednesday, December 22, 2010

நாள்தோறும் நாடோடி


இருவாரங்களாக டெல்லிக் குளிரிலிருந்து தப்பித்திருந்தேன். வேலை காரணமாக மஹாராஷ்ட்ரா பயணம். புனேவுக்கும், மும்பைக்கும் அருகிலிருக்கும் வளர்ந்து வரும் தொழில் நகரமான கோலாப்பூருக்கு ட்ரிப். கோலாப்பூரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. எப்போதும் மிதமான வெயில், மாலையானால் லேசான தூறல், அடிக்கடி பெருமழை, எப்போதாவது ஆலங்கட்டி மழை, எதற்கும் பதற்றமில்லாத நிதானமான மக்கள், சீராகி வரும் நகரின் உள்கட்டமைப்புகள், பெருகி வரும் தொழில், வேலை வாய்ப்புகள் என அருமையான நகரம். இந்நகரின் மஹாலக்ஷ்மி கோவில் மிகச் சிறப்பு. அத்துடன் இவ்வூரின் குடிசைத் தொழிலான தோல் செருப்புகள் தயாரித்தல் தற்போது அருகி வந்தாலும் கையால் தயாரிக்கப்படும் செருப்பிற்கென இருக்கும் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசாங்கம் பெருமுயற்சியெடுத்து வருகிறது. கோலாப்பூரின் செருப்புகளுக்கு உடல் வெப்ப நிலையையும், அழுத்தத்தையும் சீராக வைத்துக் கொள்ளும் தன்மையிருப்பதாய் சொல்கிறார்கள்.


கோலாப்பூரின் அருகிலேயே ஏகப்பட்ட சுற்றுலாத்தலங்கள், மலைவாசஸ்தலங்கள். மாலை நேரத்தில் சட்டென்று போய் வர இருபது கிலோ மீட்டர் தூரத்தில் பனாலா(Panhala) என்றொரு மலைப் பிரதேசமிருக்கிறது. அங்கிருக்கும் சிவாஜி மஹாராஜாவின் கோட்டை மிகப் பிரபலமானது. ஏறக்குறைய சிதைந்து விட்ட அக்கோட்டையின் மேலேயிருந்து கோலாப்பூர் மற்றும் சுற்றியிருக்கும் பல ஊர்களையும் காண முடிகிறது. மன்னர்களின் ஆட்சி இப்போது இல்லையெனினும் இன்னும் கூட அம்மக்கள் மன்னர்களுக்குத் தங்கள் மனதில் வைத்திருக்கும் மரியாதை ஆச்சரியப்பட வைக்கிறது. இவ்வூரிலிருந்து ஷீரடி, கோவா, மஹாபலேஷ்வர், பெல்காம் என முக்கியமான இடங்கள் அருகிலிருப்பது சிறப்பு. கோலாப்பூர் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் தனிக் கட்டுரை எழுத நினைத்துத் தள்ளிக் கொண்டே போகிறது. விரைவில் எழுத வேண்டும். (கோவா அல்லது மும்பை வரை விடுமுறையில் போகிறவர்கள் கோலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கும் சென்று வரலாம். அமைதியான இடம்.)

*************************************************************************************************************


மும்பை எனக்கு வாழ்நாள் கனவு. டெல்லியோ, மற்ற பெரு நகரங்களோ தராத ஒரு மகிழ்ச்சி மும்பையில் இறங்கிய அந்த நிமிடம் எனக்குத் தந்தது. சிறு வயதிலிருந்தே “பம்பாய்!” எனும் பிரம்மிப்போடே பார்த்திருக்கிறேன். அப்போது இண்டியா கேட்டை விட கேட் வே ஆஃப் இண்டியாதான் கனவாக இருந்தது. பெரிய, தொன்மையான கட்டிடங்கள் கொண்ட தென்மும்பையில் கழட்டி விட்ட எருமை போன்ற நிதானமான நடை நல்ல அனுபவத்தைத் தந்தது. மும்பையில் யாரும் நடக்க மாட்டார்கள், ஓடிக் கொண்டு தானிருப்பார்களென யோகி சொன்னதை அனுபவிக்கையில் வித்தியாசமாக இருந்தது. மும்பை ஹிந்தி கொடுமை. சென்னைப் பேட்டைத் தமிழ் போலிருந்தது. எங்கும் ஜனத்திரள். மூச்சு முட்டும் கூட்டம். புறாக்கூண்டு போன்ற வீடுகள். பறவைகள் கூட நேரம் கணக்கிட்டுப் பறக்கும் போல. யாருக்கும் எதற்கும் நேரமில்லை. எல்லாமே கடிகார முட்களைக் கணக்கிட்டே நடந்தன. எல்லாவிதமான மக்களையும் பார்க்க முடிந்தது. எப்போதும் தங்களைக் கொஞ்சம் உயர்மட்டமாகக் காட்டிக் கொள்ளும் தில்லி மனிதர்களிடையே வாழ்கையில் மும்பை ஒரு புது அனுபவம் தந்தது. (முக்கியமா ஜுஹூ பீச் பக்கத்துல ஒரு கார்னர்ல திருநெல்வேலிக்காரர் வெச்சிருக்கற பாவ்பாஜிக்கடை அபாரம். செம டேஸ்ட்டான பாவ்பாஜி. நிச்சயம் முயற்சியுங்கள்.)

*************************************************************************************************************

தமிழ்மணத்தின் சேவை ஒவ்வொரு பதிவரும் அறிந்ததே. அத்தமிழ்மணத்தின் ஓட்டுகள் ஆரம்பமாகிக் கோலாகலமாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சகபதிவர்களிடமிருந்து வரும் ஆர்வக்கோளாறான மெயில்கள் சலிப்பைத் தருகின்றன. எனக்கு ஓட்டுப் போடுங்கள். போட்டால் நானும் உங்களுக்குப் போடுவேன் என்கிற ரீதியில் வரும் மெயில்களைப் பார்க்கையில் என்னவென்று சொல்ல... அரசியலில் ஓட்டு வேட்டை நடந்தால் கொதித்தெழுந்து பதிவெழுதும் பொறுப்புள்ள பதிவர்கள் இது போன்ற சிறுபிள்ளைத் தனமான செயலைச் செய்யலாமா...

*************************************************************************************************************

டெல்லிக் குளிருக்கும், அதனால் பரிசளிக்கப்பட்ட வைரல் காய்ச்சலுக்கும் நன்றி. அலமாரியில் எத்தனை புத்தகங்கள் உள்ளன, முடித்தவை எத்தனை, பாதியில் தொக்கி நிற்பவை எத்தனை, புத்தக வாசமே போகாமல் விரல் படாமலிருக்கும் புத்தகங்கள் எத்தனையென சென்செஸ் எடுத்து ஒவ்வொன்றாக நிதானமாய் வாசிக்க நேரம் கிடைத்தது. வாசிக்க வாசிக்க “என்னை இவ்வளவு நாளாய் உள்ளே பூட்டி வைத்த துரோகி”யெனப் புத்தகங்களெல்லாம் என்னை ஏசுவதாய் உணர்கிறேன். சோம்பேறித்தனத்தின் குற்ற உணர்ச்சி மேலிட தினமும் குறைந்தது 20 பக்கங்கள் வாசிக்க வேண்டுமெனத் தீர்மானமெடுத்துள்ளேன். கொஞ்சம் கொஞ்சமாக பக்கங்களைக் கூட்டிக் கொள்ளலாம். (அதே தான்... இனி மாசம் ஒரு புத்தக அறிமுகம் தான்.)

*************************************************************************************************************

இரண்டு புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே நண்பர்களின் பரிந்துரைகள். ஒன்று நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்; மற்றொன்று அய்யனாரின் நானிலும் நுழையும் வெளிச்சம்.

நண்பனுக்காக அவனுக்கு வேண்டிய புத்தகமொன்றைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கப் போனபோது அங்கிருந்த புத்தக விற்பனையாளர், “இப்புத்தகம் எழுதியவர் இங்கு தானிருக்கிறார். கையெழுத்து வாங்கித் தரவா” என்றார். சரியென அவர் கையெழுத்துடனான புத்தகத்தை நண்பனுக்குப் பரிசளித்துவிட்டுத் திரும்பினேன். புத்தகத்தைத் திறந்து பார்த்தவன், அலாரமென அலறி என்னையழைத்துத் திட்டித் தீர்த்தான். “அவர் அங்கே ஸ்டால்ல இருந்தார்ன்னு ஏன் சொல்லல...” மெல்ல திட்டு வாங்கி ஃபோனை வைத்த பின் தான் அந்த எழுத்தாளரைப் பற்றியறியும் ஆர்வமும் அவரெழுத்துகளைத் தொடரும் வேகமும் வந்தன. தொடர்ந்து அவரின் இணையத்தில் வாசித்து வந்தாலும் அவரது புத்தகங்களை வாசிக்கும் தகுதியிருக்கிறதா எனத் தெரியாததால் இன்னும் அவ்ரெழுத்துகளை வாசிக்க ஆரம்பிக்கவில்லை. என் பெருமதிப்பிற்குரிய நாஞ்சில் நாடனின் கட்டுரைகளில் வசியமான மனது அவரின் சிறுகதைகளில் ஒன்றாது போனது என் துரதிருஷ்ட்மே. சீக்கிரமே அவரின் சிறுகதைகளை உள்வாங்கும் வாசிப்பிற்கு என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன்.

அய்யனாரின் நானிலும் நுழையும் வெளிச்சம். அய்யனாரின் எழுத்துகளை மோகிக்கும் நண்பனின் பரிந்துரை. புத்தகத்தின் பெயரே மிகப் பிடித்தமாயிருக்கிறது. இப்புத்தகத்தைப் பற்றித் தனியே எழுத வேண்டுமென்பதால் இங்கே ஒரு முற்றுப்புள்ளி. (தனிப் பதிவெழுதாம விடமாட்டியே!)

*************************************************************************************************************

கோலாப்பூரில் ஒரு மல்டிகுஸின் ரெஸ்டாரண்ட்டை சக ஊழியரின் பரிந்துரையின் பேரில் முயற்சித்தேன். அபார ருசி. வாயிலேயே நுழையாத பெயர்கள். முதல் நாள் சாப்பாடு நன்றாக இருந்ததால் அடுத்த நாள் மறுபடி போனோம். விரைவிலேயே உங்கள் வயிறெரியப் படங்களுடன் பதிவு வரும். (நோ நோ... நோ பேட் வேர்ட்ஸ்)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்
முன்பெல்லாம் ஏதாவது கோபம் வந்தால் நான் பல்லைக் கடிச்சிக்கிட்டு ஏதாச்சும் தமிழ்ல சொல்லிப்பேன். ஆனா இப்போல்லாம் முடியறதில்லை. அதிகம் என்னைக் கவனிக்கிறார் என்னவர். அப்படிக் கவனித்து அவராகவே கற்றுக் கொண்டு இப்போதெல்லாம் அடிக்கடி உபயோகிக்கறது... “அய்யோ, கடவுளே, கடவுளே.. கிடே வில்லே”
நான் ஏதாச்சும் தப்பு பண்ணாலோ இல்ல லூசுத்தனம் செஞ்சுட்டாலோ இது தான் அவர் டயலாக். “அய்யோ கடவுளே, கடவுளே” இது என்கிட்ட இருந்து கத்துக்கிட்டது. இதைத் தொடர்ந்து வரும் “கிடே வில்லே” பஞ்சாபி வார்த்தை. “எந்த நேரம்” எனப் பொருள். என் பேக்குத்தனங்களுக்கு அவர் சொல்ல வரும் அர்த்தம் இது தான்.
“அய்யோ கடவுளே, கடவுளே, எந்த நேரத்துல இவளை எனக்குக் குடுத்த...”
(ஙே!)

Monday, November 15, 2010

ஒரு மாலை இளங்குளிர் நேரம்


ஒரு மாதம் முடியும் முன்னரே பதிவுலகிற்கு மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி. எழுதுவது ஆனந்தக் கலை. (வாசிக்கறவங்களைப் பத்தி எப்போவாச்சும் யோசிச்சியா...)

தீபாவளி இனிதாய்க் கழிந்தது. வெடிச்சத்தங்களும் பட்டாசு வாசமும் ஊரையடைக்க ஒரு மத்தாப்பு கூட இல்லாமல் நான் கொண்டாடிய முதல் தீபாவளி. சிறு வயதில் கையில் வைத்துத் தூக்கியெறிந்த லட்சுமி வெடிகள் என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. இதுவரை இரு தீபாவளி விபத்துகளைக் கடந்து வந்துமே வெடியில்லாத தீபாவளி என் கனவிலும் வந்ததில்லை. உறவினர்கள், அக்கம்பக்கத்தினரென அவரவர் பங்கிற்கு வெடிகளைக் கொண்டு வந்து தருவார்கள் எங்கள் வீட்டில். சிவகாசி அருகிலிருந்தது மேலும் சிறப்பு. தீபாவளி வெடிகளில் கொஞ்சத்தை எடுத்து இதைக் கார்த்திகைக்கு வெடிக்கலாம் என அப்பா சொல்லி எடுத்து வைத்ததும், இருக்கும் வெடிகளை விட உள்ளே வைக்கப்பட்ட வெடிகள் மீதே அதிகக்கவனமிருக்கும். எல்லாம் சாம்பலாய்ப் போன பின்னே நிம்மதிப் பெருமூச்சு வரும்.

ஆனால் யோகிக்கு சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சி அதிகம். (!!!) பாலிதீன் பைகளைத் தவிப்பது, குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவது, வாகனங்களை மாசின்றிப் பராமரிப்பது என வழக்கமான ஒன்றுடன் வெடியில்லாத் தீபாவளியும் அடக்கம். முதல் வருடம் தலை தீபாவளி என்பதால் என் தொல்லை தாங்காமல் கொஞ்சமாய் வாங்கித் தந்தார். இந்த முறை அதுவும் கட். பேருக்கு ஒரு பாம்பு மாத்திரை கூட கொளுத்தல. :( (உக்காந்து உக்காந்து லக்ஷ்மி பூஜை பண்ணியே தீபாவளி கழிஞ்சது)



*************************************************************************************************************

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நொய்டாவின் அவ்வைத் தமிழ்ச்சங்கம் நடத்திய யுவகலாபாரதி “ஸ்வர்ணமால்யா”வின் பரத நிகழ்ச்சி மிகச் சிறப்பு.

மிக எளிமையாக, அதீத அழகாக மேடையில் தோன்றிய ஸ்வர்ணமால்யா, மிக இயல்பாகப் பேச ஆரம்பித்தார். நடனத்தில் ஆர்வமிருக்கும் குழந்தைகளுக்கு பரதம் பற்றிய அறிமுக உரையுடன் கூடிய நடன நிகழ்ச்சியாய் அமைந்திருந்தது. அவரிடமிருந்த உற்சாகம் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை குறையவில்லை. அவரின் மிகத் தெளிவான ஆங்கிலமும் தமிழும் கூடுதல் பலம். பக்கவாத்தியங்களும் மிகச் சிறப்பு. ஆடி அவர் களைப்படையவில்லை. முழு உற்சாகத்துடனிருந்தார். சிறப்பான நாட்டிய நிகழ்ச்சி. அவர் உடலசைவுகளைக் காண்பதா, விரல்களின் அபிநயங்களை ரசிப்பதா அல்லது முகபாவங்களில் மூழ்குவதா எனும் சந்தேகம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு வந்தது மிகையில்லை.

இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நேரத்தில் ஒரு குழந்தை “எங்கம்மா என்னை ஹோம் வொர்க் செய்யலைன்னா திட்டறாங்க. என்னால படிப்புக்கும் நடனத்துக்கும் ஒண்ணா நேரம் குடுக்க முடியல. நீங்க எப்படி சமாளிச்சீங்க” எனக் கேட்கையில் அவர் முகத்தில் நாணமும் பார்வையாளர்களிடமிருந்து கரகோஷமும். “ஹோம்வொர்க்ஸை மிஸ் பண்ணித் தான் பரதம் கத்துக்கிட்டேன். ஆனாலும் எக்ஸாம்ஸ்ல மார்க் ஸ்கோர் பண்ணிட்டேன்” என குழந்தையின் கன்னம் வருடி அழகாய்ச் சொன்னார். பரதம் அவர் மூச்சில் கலந்திருந்ததை உணர முடிந்தது. (ஒரு அழகான இளங்குளிர் மாலை நேரம்)


*************************************************************************************************************

ஒரு இணையதளத்தைத் தற்செயலாய்ப் பார்த்தேன். www.snapdeal.com. இந்தியாவின் பெரு நகரங்களில் தினமொரு ஆஃபரென அள்ளி வழங்குகிறார்கள். இது எப்படி சாத்தியமென ஃபோன் செய்து விசாரித்ததில் பிஸினஸ் ப்ரோமஷனுக்காக செய்வதாகவும் அவர்களிடம் 85000 கஸ்டமர்களின் டேடாபேஸ் இருப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் இதில் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை உபயோகிப்பது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்கிறார் என்னவர். அப்படியா? விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். (இதுக்காக மாச பட்ஜெட்ல ஒரு பங்கு போய்டக் கூடாதுன்னு அவர் பயப்படறாரோ என்னவோ!)

*************************************************************************************************************

இன்று பதிவுலகில் தனது ஐந்தாவது வருடத்தில் காலடி (கையடி!?) எடுத்து வைக்கும் பதிவர் முத்துலெட்சுமிக அவர்ளுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகள். சிறு முயற்சி பெரும் சாதனையாய் வளர நாம் அவரை ஊக்குவிப்போம். (ஊக்கு விப்போம் இல்ல)

*************************************************************************************************************

எழுத்தார்வமும் வாசிப்பார்வமும் உள்ள எங்க ஊர்ப் பொண்ணு ஒருத்தங்களை அடிச்சுப் பிடிச்சு எழுதச் சொல்லி இழுத்திட்டு வந்தேன். அம்மணி இப்போ தான் ப்ளாக் ஆரம்பிச்சா மாதிரி இருக்கு. அதுக்குள்ள நாற்பதாவது பதிவை நெருங்கப் போறாங்க. அவங்களுக்கு கொஞ்சம் லேட்டான வரவேற்பையும், நம்மளோட வாழ்த்துகளையும் சொல்லிக்கலாம். வாங்க ஜிஜி வாழ்த்துகள். (எங்க ஊர்ப் பொண்ணு - ஸ்ரீவி டு டெல்லி)

*************************************************************************************************************

பதிவர்கள் ட்விட்டரில் 140 வார்த்தைகளுக்குள் எண்ணங்களைப் பகிர்வதோடில்லாமல் பஸ்ஸிலும் ஆக்டிவாக இருப்பது அவர்களுக்குள் நல்ல நட்பை வளர்க்கிறது. நேரம் கொல்லியான பஸ்ஸில் பொழுது போகாத அசமந்த மதிய வேளையில் நான் பஸ்ஸியவை.

# ரோட்ல நின்னு ஒரு பொண்ணைப் பார்த்தா ‘பொறுக்கி’ன்னு சொல்றாங்க. அதே, வீட்ல போய் பொண்ணைப் பார்த்தா ‘மாப்ள’ன்னு சொல்றாங்க. வாட் அ க்ரேஸி சொஸைட்டி!

# ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“ஐ ஆம் ஸாரி”ன்னு சொல்றதில்ல.
“ங்கொய்யால உன் தப்புதான்டா”
அப்படிங்கறது.

ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“ஐ மிஸ் யூ”ன்னு சொல்றதில்ல
“டேய் உயிரோட இருக்கியா செத்துட்டியாடா”ங்கறது.

ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“அவளை லவ் பண்றியாடா”ங்கறதில்ல.
“நாளைக்கு அவ வீட்டுக்குப் போறோம்;
தூக்கறோம் மச்சி”ங்கறது.

நண்பேன்டா!

# சாஃப்ட்வேர் டெவலப்பர் மற்றொரு சாஃப்ட்வேர் டெவலப்பரை சந்திக்கிறார்.
ஒரு பிச்சைக்காரர் மற்றொரு பிச்சைக்காரரை சந்திக்கிறார். இரு ஜோடியும் ஒரே கேள்வியைக் கேட்டுக் கொள்கிறார்கள். ????


எந்த ப்ளாட்ஃபார்ம்ல இப்போ வொர்க் பண்ணிட்டிருக்க?

# பசங்க காதலிச்சா சேரலாம்என்ற நம்பிக்கையில் காதல் செய்கின்றார்கள்.... பெண்கள் பெற்றோர் இருக்காங்க எப்படியும் பிரிசிடுவாங்க என்ற நம்பிக்கையில் காதலிக்கின்றார்கள்... :)

# எனக்கு சகோதரர்கள் குறைவு. குறைவே நிறைவாயுள்ளது.

# சனிக்கிழமை அலுவலகத்துக்கு வர சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கிறார் மேனேஜர். அவரைப் பார்க்கிறேன் நான். ஆஃபிஸில் சைட்டடிக்கலாம் தானே...

# காதலிக்கு பைக் ஓட்டக் கற்றுத் தரும் காதலனைப் பார்க்கையில் பொறாமையாய்த் தான் இருக்கிறது. நானும் பைக் ஓட்டத் தெரியாமலேயே இருந்திருக்கலாமோ...

(ஏற்கனவே பஸ்ஸில் கும்மியவர்கள் இங்கும் கும்ம வேண்டாமென [கெஞ்சிக் கதறி] எச்சரிக்கப்படுகிறார்கள்)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

தமிழ்நாட்டிலிருந்து அழைக்கும் உறவினர்களுடனான உரையாடலைத் தமிழிலேயே ஆரம்பிக்க விரும்புகிறார் யோகி. “ஹாய் எப்படி இருக்கீங்க.. நான் நல்லா இருக்கேன். பொண்டாட்டி நல்லா இருக்கா. அப்பறம்” இதுக்கு மேல் எதிர்முனையில் தமிழ்த் தாக்குதல் தொடர்ந்தால் “அய்யோ, போதும் போதும். எனக்குத் தெரியாது.”
“ஏன் உங்க வொய்ஃப் இன்னும் தமிழ் முழுசா கத்துத் தரலையா” எதிர்முனையில் நம்மை அசிங்கப்படுத்த நிச்சயம் யாரேனும் இந்தக் கேள்வியைக் கேட்பதுண்டு.
“அய்யோ பாவம் பையன் நான். என்ன பண்ண.. என் வடியார் சரி இல்ல”
முதல் முறை இதை நான் கேட்ட போது “வடியார்?” என்றேன் அவரிடம்.
பின்னரே தெரிந்தது ஏதோ புத்தகம் வாங்கித் தமிழ் பழக ஆரம்பிக்க அதிலிருந்த வாத்தியார் (vadiyar) வடியாராகிப் போனது. அவ்வார்த்தையைத் திருத்திய பின் இப்போதெல்லாம்
“நான் நல்ல மாணவன். என் வாத்தியார் சரி இல்ல” அவரின் ஸ்டேண்டர்ட் டயலாக்.
எல்லாரும் என்னைத் திட்றாங்க. தமிழ் நல்லா சொல்லிக் குடுத்தா என்னன்னு. :(
(கொஞ்சிக் கொஞ்சித் தமிழ் பேசி குடும்பத்தோட செல்ல மாப்பிள்ளை ஆகிட்டார். நானும் ஆரம்பிக்கிறேன் பஞ்சாபி அட்டாக்கை.)

Friday, September 10, 2010

பழக்கத்தில் வந்தது


பதினைந்து நாட்கள் அரக்கப் பறக்க ஓடும் நகர வாழ்க்கையிலிருந்து விடுதலையாகப் பிறந்த மண்ணிற்குப் போய் வரும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே நாளில் போவதென முடிவாகி, பயணச் சீட்டு பெறப்பட்டு மூன்றாவது நாளில் ஆரம்பமான திடீர் பயணம். தனியாக ரயிலில் போவதும், வருவதுமெனத் தீர்மானமான போது அலைகள் பேரிரைச்சலுடன் ஆடி மகிழ்வதைப் போன்ற பேரானந்தம். வித்தியாசமான பயண நட்புகள், திகட்டத் திகட்ட வாசிப்பு, எதிர்பாரா நண்பர்களின் சந்திப்பு, பள்ளித் தோழிகளுடனான அரட்டை, தமிழ்த் திரைப்படங்கள், வளர்ந்துவிட்டதையுணர்த்தும் பொறுப்புகள், அம்மாவின் வத்தக்குழம்பு வாசம், வாசல் நிறைத்தப் பெருங்கோலமென அடித்துப் பெய்த மழையால் நிறைந்த குளமென மனம். சொல்லச் சொல்ல மாளாத நிறைவெனவிருந்தது இந்தப் பயண அனுபவம். அந்நிறைவிற்கு மற்றுமோர் காரணமாயிருந்த மதுரைப் பதிவர் சந்திப்பிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். பதிவ நண்பர்கள் கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீ, மதுரை சரவணன், தருமி ஐயா மற்றும் வெள்ளமென கருத்துகளைப் பகிர்ந்த கவிஞர் நேசமித்திரனுக்கும் நன்றிகள். (கருத்தொத்த நட்புகள் சங்கமிக்கும் பொழுதை விட சுவாரஸ்யம் வேறென்ன இருக்க முடியும்..)


*************************************************************************************************************


கவலைப்பட ஏதுமில்லையெனினும் தேடித் தேடிக் கவலை கொள்ளப் பழகி விட்டிருக்கின்றனர் நம் குலப்பெண்கள். என் அம்மாவைப் பற்றிச் சொல்கிறேன். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கையில் காசு கொடுத்துக் கவலை வாங்க ஜோதிடரிடம் போனாள். கட்டம் போட்டு, கணக்குப் போட்டு முக்காலத்தையும் சொன்னவரைப் பார்த்து பத்மினி ரேஞ்சுக்கு கண்ணால் நன்றி சொல்லிப் பணமும் கொடுத்து வந்தாள். ஆனால் ஒரு விஷயம், ஜோதிடம் பொய்யென்றெண்ணியிருந்த எனக்கு, அதன் மேல் ஒரு நம்பிக்கையையும், ஆர்வத்தையும் கொண்டு வரச் செய்த ஜோதிடரை சந்தித்ததில் மகிழ்ச்சியே. ஜோதிடமும் அறிவியலே என்ற மனக்கணக்கு அதன் பால் ஒரு ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. அது குறித்து மேலும் அறிந்து கொள்ளும் ஆவலேற்பட்டுள்ளதால் தேடி வாசிக்கிறேன். (கண்டிப்பா போர்ட் மாட்டி விட்டு ஜாதகம் பார்க்கும் எண்ணமில்லை :) )


*************************************************************************************************************


க.சீ.சிவக்குமாரின் எழுத்தை அறிமுகம் செய்தார் நண்பரொருவர். அவர் எழுதிய கானல் தெருவை சென்னையில் கையிலெடுத்து நாக்பூரில் முடித்தேன். தொடர்ந்து வாசிக்க முடியாமல் அங்கங்கே நிறுத்திக் கொஞ்சம் யோசிக்க வைத்திருந்தார். கதைக்கரு, கதைக்களம் என்ற விஷயங்களெல்லாம் பெரிதாய் என்னைக் கவரவில்லையென்றாலும் மொழி நடையிலேயும், உரையாடல்களின் செழுமையிலேயுமே அதிகம் ஊறிப் போனேன். அடிக்கோடிட்டுக் காட்டும் படியான சில வரிகள் கட்டிப் போட்டதென்னவோ உண்மை தான். இதைப் போன்றதொரு வசியப்படுத்தும் வாசிப்பிற்குத் தயாராக யூமா.வாசுகியின் மஞ்சள் வெயில்ஐக் கையிலெடுத்துள்ளேன். முதல் ஐந்து பக்கங்களிலேயே தேனிலூறிய மாதுளை முத்தென இனிக்கிறது. முழுவதையும் சுவைத்து ருசியைப் பகிர்கிறேன். (வாசிப்பிற்கு வழிகாட்டும் நட்புகள் பலமெனக்கு)


*************************************************************************************************************


லஃபாங்கே பரிந்தே (Lafangey Parindey) சமீபத்தில் ரசித்துப் பார்த்த படம். எப்போதும் சிரித்தே கடத்திக் கொண்டிருந்த தீபிகாவிற்கு வித்தியாசமான, லோக்கல் மராத்திப் பெண் ரோல். அழகாக, அளவாக செய்திருக்கிறார். கதையும், காட்சிகளும் வித்தியாசம். நீல் நிதின் பெண்களை கிறங்கடிக்கும் உடல் கோப்புடன் படம் முழுக்க வலம் வருகிறார். கூடவே கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கலாம். ஒரு ஃபைட்டர், அவரால் பார்வையிழக்கும் பெண்ணின் நடனக் கனவு நிறைவேற உதவி செய்கிறார். இருவரும் மாறி மாறிப் பேசிக் கொள்ளும் உத்வேகம்மிக்க உரையாடல்கள் உற்சாகம். தொய்வில்லாத திரைக்கதை, தீபிகா மற்றும் நீல் நிதினின் நடன உழைப்பு, நண்பர்களின் குதூகலம், அனைத்துத் தரப்பினரையும் கவரும் கதை என பல ப்ளஸ் இருப்பினும், ஹீரோ தேர்வு, டிம்மான லைட்டிங்கென சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம். (லஃபாங்கே பரிந்தே - பெயருக்குப் பொருத்தம்)


*************************************************************************************************************

நா சப்புக் கொட்டும் சுவைக்கு வெளியில் சாப்பிட வேண்டுமா.. ஷெஃப் சஞ்சீவ் கபூரின் “The Yellow Chilly" முயற்சித்துப் பாருங்கள். ரம்மியமான சூழ்நிலை, மனதை மயக்கும் இசையுடன் வேறெந்த உணவகங்களிலும் பார்த்திராத வித்தியாச ஐட்டங்களுடன் மெனு கார்ட் உங்களை வரவேற்கும். தரமான, சுவையான, கொஞ்சம் விலையும் கூடுதலான மெனுக்கள் அதிகம். ஆனால் கொடுக்கும் பணத்திற்குக் குறைவில்லாமல் உணவை ரசிக்கவும், ருசிக்கவும் உத்திரவாதம் தரலாம். ஸ்டார்ட்டரே வயிறு நிறைக்குமளவு நல்ல அளவுடனும், ஆரோக்கியமாகவும் வழங்கப்படுவது சிறப்பு. (சென்னை, பெங்களூருவில் இன்னும் ஆரம்பிக்கப்படாத இவ்வுணவு விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டால் மற்ற உணவகங்களுக்குப் பெரும் போட்டியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை)


*************************************************************************************************************


வாசிப்பில் கவர்ந்தது

பழக்கத்தில் வந்தது..

பள்ளியே எனக்காகக்

கைதட்டியபோது

ஃபெயிலாகி நின்றாள் என் தங்கை..

மக்கு என்றார்கள் அவளை!


மேலே படிக்க

நான் கெஞ்சி நின்ற போது

தவறிய பேப்பர் எழுத

முரண்டு பிடித்தாள்..

ஞான சூன்யம் என்றார்கள் அவளை!


அரசு வேலைக்காக

நான் தேர்வெழுதிய போது

அம்மாவுக்குப் போட்டியாக

வீட்டு வேலை செய்தாள்..

இது இவ்வளவு தான் என்றார்கள் அவளை!


போஸ்டிங் வாங்கியதும்

என்னைப்

பெண் கேட்டு வந்தார்கள்..

இதுவும் இருக்கே என

அவளைத் தான் முறைத்தார்கள்!


யாருமே எதிர்பார்க்கவில்லை..

ஓர் மெத்தப் படித்த இளைஞனோடு

அவளுக்குக் காதல் வருமென்று!


சந்தோஷமாய்க் கட்டிக் கொண்டு

ஃபாரின் பறந்தவள்

அடிக்கடி ஃபோன் செய்கிறாள்..

படித்து சேகரித்த ஆங்கிலத்தை

விழுங்கி செரிக்கிறது

பழக்கத்தில் வந்த ஆங்கிலம்!

- கோ. தமிழ்ச்செல்வி


*************************************************************************************************************


யோகி டைம்ஸ்

யோகியின் டைமிங் சென்ஸ் அதிகமாகி விட்டது. ஏதாவது சொன்னால், “எழுதறவ புருஷன் இவ்வளவாச்சும் பேச வேண்டாமா..” எனப் பாவமாய் பழியையும் என் மேலே போடுகிறார்.

20 நாட்கள் கழித்து வந்தவளைப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு John Grisham இன் The Pelican Brief இல் மூழ்கியிருந்தவரிடம், “ஏம்ப்பா இவ்ளோ நாள் கழிச்சு வந்திருக்கேன். என்கிட்டப் பேசலாம்ல” என்றேன்.

“ம், சொல்லு சொல்லு. எப்போவும் நீதானே பேசுவ. நான் கேட்டுத் தானே பழகியிருக்கேன். இப்போவும் சொல்லு. நான் கேக்கறேன்” என புத்தகத்தை மூடிப் பக்கம் வந்தவரிடம் ஆசையாய், “ஐ லவ் யூ” என்றேன். “இதைத் தான் 4 வருஷம் முன்னாடியே சொல்லியாச்சே. ஏன் அடிக்கடி ஜெராக்ஸ் எடுத்து உபயோகிச்சிட்டு இருக்க. வேற ஏதாச்சும் சொல்லேன்” என்கிறார் பாவமாக. ‘ஙே’ வாகிப் போனேன் நான். (வர வர அடிக்கடி இந்த மாதிரி பேக்கு ஆக்கறார் :( )

Tuesday, August 10, 2010

சித்திரம் பேசுதடி!!!


டெல்லி வரும் நண்பர்கள் பலருக்குமான பிரச்சனை தங்குமிடம். தலை நகரின் பிரம்மாண்டங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதவை இங்கிருக்கும் செலவுகளும். குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியிலேயே இரண்டாயிரம் ரூபாய்க்குள் டெல்லியை அடைந்து விடும் பலருக்கும் அறையெடுத்துத் தங்குவதென்பது மிரட்சியான விஷயம். சில ஆயிரங்களுக்குள் நல்ல, தரமான, பாதுகாப்பான, நகரின் பிரதான இடத்திலிருக்குமாறு தங்கும் விடுதிகள் கிடைப்பது அசாத்தியமே. இக்குறையைப் போக்க டாடா அறிமுகப்படுத்தியுள்ள பட்ஜெட் ஹோட்ட்ல்கள் “Ginger” (ஜிஞ்சர்). ஆயிரம் ரூபாய்க்கே குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை கிடைக்கிறது. அனைத்து வசதிகளுமிருக்குமாறும் தரமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும் இது டெல்லி ரயில் நிலையத்தின் முன்னேயே அமைந்துள்ளது. இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் கிளைகளை ஆரம்பித்தும், வாடிக்கையாளர்களை த்ருப்திப்படுத்தும் சலுகைகளை அளித்தும் பலரையும் வரவேற்கிறது இவ்விடுதிகள். இவர்களின் இத்தனித்தன்மையான சேவையால் அறைகள் கிடைப்பதில் எப்போதும் பற்றாக்குறை இருக்கிறது. அதனால் முன்பதிவு அவசியமாகிறது. இனி இந்தியாவின் பெரு நகரங்களுக்குப் பயணிக்கவிருக்கும் அனைவரும் முன்னமேயே பதிவு செய்து இவ்விடுதிகளின் வசதியை அனுபவிக்கலாம் (பேர் தான் ஜிஞ்சர்ன்னு காரமா இருக்கு. வசதிகள் சொகுசாவே இருக்கு)

*************************************************************************************************************

நண்பர் ஒருவர் வருத்தத்துடன் பகிர்ந்த ஒரு வீடியோவைக் கண்டு மிகுந்த சினமானது. டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன், கே.பி. சுந்தராம்பாள் என பாடல்களால் நம்முள் பக்தியை ஊற்றியவர்கள் பலர். இப்போதும் முருகன் பாடல்களில் டி.எம்.எஸ். குரலுக்கு இணையேது. இது போன்றே நம்மை ஆனந்தப்படுத்தும் பாடல்களைத் தருபவர் பெங்களூர் இரமணியம்மா. அவரது வேலவா வடிவேலவா எனும் பாடலை எந்த ஊரிலெனத் தெரியவில்லை, யாரென்றும் தெரியவில்லை போட்டு சாவடிச்சிருக்காங்க. ஓங்கி அறைய நினைத்து முடியாமல் போன இயலாமையும், ஒரு பக்திப் பாடலுக்கு அந்தப் பெண் அணிந்திருக்கும் அரைகுறை உடைகளும், உடலசைவுகளும் உள்ளுக்குள் ஏனோ அதீத வருத்தத்தைத் தருகின்றன. இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை நேரில் காண நேர்ந்தால் யோகியைத் தனியாக விட்டுப் போவதை எண்ணிக் கூட வருந்தாமல் அப்பெண்ணைப் போட்டுத் தள்ளிவிட்டு கம்பி எண்ணப் போயிருப்பேன். (என்ன கொடுமை சரவணன் இதுன்னு கூட சொல்ல முடியாதே. கொடுமையே சரவணனுக்குத் தானே :( )

*************************************************************************************************************


நம் குடும்பத்தின் முந்தைய தலைமுறையினரை நாம் அறிந்திருக்கவில்லை; மூதாதையர் பெயர் தெரியவில்லை எனக் குமுறுவதை நிறுத்திவிட்டு வரும் தலைமுறைக்கு நம் பெற்றோர் மற்றும் நம் பெயரை எப்படி எடுத்துச் செல்வது என யோசிக்கலாமே. மும்பையிலிருக்கும் என் அண்ணன் ஒருவர் குடும்ப வரைபடமொன்றை ஏற்படுத்தி அதில் ஒவ்வொருவரின் மெய்ல் ஐடியையும் சேர்த்திருந்தார். கடந்த ஒரு வருடத்தில் உறவுகளுக்குள் மிகுந்த மாற்றம். மொத்தக் குடும்பத்தில் எத்தனை பேரிருக்கின்றனர் எனக் கூடத் தெரியாமலிருந்தவர்கள் இப்போது ஒவ்வொருவரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களுக்கு வாழ்த்துவது, அடிக்கடி மெயிலில் பேசிக் கொள்வதென ஒரு நல்ல பகிர்வும், மனமகிழ்வும் ஏற்பட்டிருக்கிறது. தவிர, குடும்பத்திலிருக்கும் வித்தியாச உறவுகளை அறியவும் முடிந்தது. எங்கள் குடும்பத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என அனைத்து மொழி சொந்தங்களும் உள்ளன. ஆம், என் அண்ணாக்கள் பலரும் காதல் திருமணம். ஒவ்வொருவரும் அவர்கள் சென்று குடியேறிய ஊர்களிலேயே காதலித்துத் திருமணம் செய்தவர்கள். இதில் எல்லாவற்றிற்கும் மேலாக என் அத்தை பையனொருவர் அமெரிக்காவிலேயே ஒரு கிறித்துவரை மணமுடித்து எங்கள் குடும்பத்தில் ஒரு கேத்தரினும் இருக்கிறார். இவையனைத்தையும் அறியவும், அனைவருடனும் தொடர்பிலிருக்கவும் உதவிய அண்ணனுக்கும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட Geni இணையதளத்திற்கும் நன்றி. நீங்களும் முயற்சிக்கலாமே. (நேர்ல எல்லாரும் ஒண்ணு சேர்ந்து பொங்கச் சோறு வெச்சு சாப்பிட்டக் காலமெல்லாம் போய் மெயிலில் ஹாய் எனத் தொடரும் மாற்றங்கள்)

*************************************************************************************************************

வைஷ்ணு தேவி பயணம் குறித்து எழுதியிருந்த பொழுது ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல மறந்து விட்டேன். அது என்னவென்றால் மலைக்கு ஏறும்முன் கீழிருந்து ஒரு சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும். அச்சீட்டில் எத்தனை பேர் செல்கிறோமென்ற எண்ணிக்கை மட்டுமிருக்கும். இச்சீட்டு இலவசமாகக் கட்ராவிலேயே கிடைக்கும். மட்டுமல்லாமல் பெரும்பாலான SBI ATMகளிலும் கிடைக்கிறது. இச்சீட்டின்றி மேலே செல்ல அனுமதி கிடையாது. இதன் மூலம் எந்த ஒரு அபாய நேரத்திலும் மலை மேல் எத்தனை மக்கள் உள்ளனர் என அறியலாம் என்பதே நோக்கம். நல்ல விஷயமாகப்பட்டது. (மலைக்குப் போன இடத்துல ஏதாச்சும் ஆச்சுன்னா மீடியாக்காரங்களுக்கு எண்ணிக்கை வேணும்ல)

*************************************************************************************************************

மதராசப்பட்டினத்தின் பாடலொன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் போன வாரம் தான் அமைந்தது. பாடல் காட்சி லகான் திரைப்படத்தை நினைவூட்டியது. படம் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. பலரின் விமர்சனங்கள் கொண்டு பார்க்கையில் லகான் மற்றும் டைட்டானிக்கின் தாக்குதல் படத்திலிருப்பதாகத் தெரிகிறது. அங்காடித் தெரு, களவாணி வரிசையில் பார்ப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் மற்றொரு படம். (எப்படியோ அங்கீகாரப் பூர்வமான டிவிடி வந்து தான் பாக்கப் போற. ஏன் இந்த பில்டப் என துப்புபவர்கள் தூரப் போக ;) )

*************************************************************************************************************

வட இந்தியத் தொலைக்காட்சிகளின் ஒரு நல்ல விஷயம், வெளியாகி திரையரங்கில் ஓடாமல் திரையரங்கை விட்டு ஓடிடும் படங்கள் விரைவிலேயே சின்னத் திரையில் வந்துவிடும். அதாவது படம் வெளியாகி ஒரு மாதத்தில். அதுவே சூப்பர் ஹிட் படமெனில் ஆறு மாதங்களில். உதாரணத்திற்கு ப்ளூ, கைட்ஸ், 3 இடியட்ஸ், மை நேம் இஸ் கான், கார்த்திக் காலிங் கார்த்திக் எனத் தொடர்ந்து போன வாரம் ஒளிபரப்பப்பட்ட ராவண் வரை. ஆனால் நம்மூரில் ஓடாத படத்துக்கே ஓவர் பில்டப் குடுக்குறாங்களே அது ஏன்... (இந்த ஊர் கல்சரை அங்கே ஃபாலோ பண்ணினா இந்நேரம் சன் பிக்சர்ஸின் அவ்வளவு படங்களும் தொலைக்காட்சியில் வந்திருக்கும்)

*************************************************************************************************************

விகடனில் நாலு வரிக்கு நாம சொன்ன விஷயம் வந்ததுக்கே என்ன ஒரு ரெஸ்பான்ஸ். அது தான் விகடன் ரீச். ரொம்ப மகிழ்வாகவும், நெகிழ்வாகவுமிருந்தது. என் மனதிலிருந்து இதற்காக நான் நன்றி சொல்ல வேண்டுமெனில் அது பரிசல் கிருஷ்ணாவிற்குத் தான். ரொம்ப தேங்க்ஸ் கிருஷ்ணா. (விகடனில் சுஜாதாவையும், எஸ்.ரா.வையும் பார்த்து மிரண்டிருக்கிறேன். அதில் நானுமா.. இன்னும் நம்ப முடியவில்லை.)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

போன வாரம் ரொம்ப ஆசையாய் “ரசம் பண்ணேன்” என்றார் என்னவர். ரசம் சாதம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு என்றதும் ரசம் செய்தேன். நிறைய ரசம் விட்டு சாப்பிட்டவர் என் தட்டிலும் ரசத்தை ஊற்றிக் கொண்டேயிருந்தார். “ஜி, போரும் ரசம்” என்றேன். “ஓ, இந்த ரசம் பேரு போரும் ரசமா.. எப்படிப் பண்ண... ரொம்ப நல்லாருக்கு” என அப்பாவியாய்க் கேட்க மறுபடி “நான் போதும் ரசம்ன்னேன்” என்றேன். இவருக்காக நான் பேசும் தமிழை டீஃபால்ட்டாக வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

போன வார இறுதியில் தமிழ்ப்படம் பார்க்க வேண்டுமென சித்திரம் பேசுதடி டிவிடி வாங்கி வந்தோம். தமிழைப் படப் பெயர்களின் வழியாய்க் கற்கும் யோகியிடம் “சித்திரம் பேசுதடி. சொல்லுங்க. என்ன அர்த்தம்னு” என்றேன். ஒரு நிமிடம் யோசித்து விட்டு “சித்திட்ட பேசணுமா” என்றார். ஙே என முழித்துக் கொண்டு “இல்லை இல்லை” என்றேன். “ஓகே, எக்ஸாக்ட்டா அது இல்லைன்னா சம்திங் ரிலேட்டட் டு சித்திகிட்ட பேசறது”ன்னார். என்ன சொல்லவெனத் தெரியாமல் கொல்லென சிரித்து வைத்தேன். (சித்திரம் பேசுதடி ன்னு வெச்சு புரிஞ்சிருக்கார்)

Wednesday, May 26, 2010

ப்ளாகோமேனியா



உசுரே போகுதே உசுரே போகுதே....ன்னு கார்த்திக் உருகும் போது நிஜமாவே உசுரே போகுது. ச்சே, என்ன ஃபீல் குரல்ல இந்த மனுஷனுக்கு. காலேஜ்ல இருக்கும் போது கார்த்திக்கின் குரல் மீது தீராக் காதல் கொண்டவள் நான். யாருக்குக் கார்த்திக்கை ரொம்பப் பிடிக்கும்ன்னு பொண்ணுங்களுக்குள்ள போட்டியெல்லாம் உண்டு. அவர் வேற சின்ன பையனா ஸ்மார்ட்டா இருப்பாரா.. எந்தப் பொண்ணுக்குத் தான் பிடிக்காது. எங்க ரூம் முழுக்க தினமும் சாயங்காலம் கார்த்திக் குரல் ஒலிச்சுட்டு இருக்கும். ப்ரொஃபஸர்ஸோட லெக்சர்ஸ்ல இருந்து மண்டையைக் காப்பாத்தினது கார்த்திக் தான். அவரோட நேந்துக்கிட்டேன்ல ஆரம்பிச்சு இப்போ வரைக்கும் ஒவ்வொண்ணுமே ரசனை ரகம். சரி, இப்போதைக்குக் கார்த்திக்கை விட்டுடலாம். அவரோட “உசுரே போகுதே” தான் மேட்டர். எல்லாருக்கும் இந்தப் பாட்டுப் பிடிக்கும்ன்னு தெரியும். இதைக் கேட்டவங்க இதே பாட்டை அவர் ஹிந்தில பாடிருக்குறதையும் கேளுங்களேன். ச்சே, அதே உருக்கம். தமிழ் “உசுரே போகுதே”லேயும், ஹிந்தி “பெஹனே தே”லயும் அவர் குரல்ல என்ன வித்தியாசம்ன்னு தெரிஞ்சுக்க ரெண்டையும் ஒரே நேரத்துல ப்ளே பண்ணிக் கேட்டேன். ச்சே, ஒரே மாதிரி போகுது ஏ.ஆர்.ஆர். ம்யூசிக்கும், கார்த்திக் குரலும். கார்த்திக்கைப் புகழ்ற இந்த நேரத்துல அவர் கூட சேர்ந்து போற குரலை மட்டும் விட்டுட்டா எப்படி... மொஹமத் இர்ஃபான் குரல் கார்த்திக் குரல் கூட அவ்ளோ ஆப்ட்டா பொருந்திப் போகுது. ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு நல்ல பாட்டைக் குடுத்ததுக்கு நிச்சயம் பாராட்டுகள். (என்னை மாதிரியே கார்த்திக் குரலைக் காதலிப்பவர்களின் செவிக்கு விருந்து இங்கே. என்ஜாய் மக்களே)

*************************************************************************************************************

ரொம்ப நாளாக ஃபேஸ்புக்கிற்குள் நுழையாமல் தவிர்த்து வந்தேன். நேரமின்மை அதற்கான காரணமாக இருந்திருந்திருக்கலாம்.போன வாரம் கலீக் ஒருத்தன் அதில் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து கேட்டேன். அவனே சொல்லிக் கொடுத்து ஆரம்பித்தும் கொடுத்தான். அன்றிலிருந்து இன்று வரை தினமும் வீட்டு ஸ்டவ்வில் என்ன இருக்கிறதென மெனக்கிடுகிறேனோ இல்லையோ, கஃபேயில் என்ன என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.இது தவிர ஆரம்பித்த 2 நாட்களில் காலை எழுந்ததும் அய்யோ நேத்து அடுப்புல வெச்சது பொங்கி வழிஞ்சிருக்குமே எனப் பதறி லேப்டாப்பைத் திறந்தேன். கிட்டத்தட்ட ஒரு அடிக்‌ஷன் மாதிரி ஆகிவிட்டது. இனி எது பொங்கி வழிஞ்சாலும், எத்தனை ஈ மொய்ச்சாலும் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கக் கூடாதுன்னு இருக்கேன். (இந்த முறையாவது சொன்ன வாக்கைக் காப்பாத்துறேனான்னு பார்க்கலாம்)



*************************************************************************************************************

நேற்றைய பேப்பரில் வாசித்த செய்தி ஒன்று. தொலைபேசி, கைபேசி, இண்டெர்னெட் என எல்லாம் கண்டுபிடிக்கக் கூடிய தகவல் தொடர்பென்பதால் தீவிரவாதிகள் வண்ணமிட்ட புறாக்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் புறாக்களின் வாலிலும், இறகுகளிலும் செய்திகளை எழுதிப் பரிமாறிக் கொள்வதாக மும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அனைத்துப் புறாக்களையும் பிடித்து சோதனை நடத்தப்படுகிறது. பாவம் போலீஸ். இப்படிப் புறா பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்களே. (இனி காவல் துறை ட்ரெய்னிங்கில் புறா பிடிக்கும் பயிற்சியும் சேர்ப்பாங்களோ!)


*************************************************************************************************************

வோடஃபோனின் சர்வீஸ்களில் தற்போது மிகவும் பயனுள்ள, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உபயோகமாக இருப்பது வோடஃபோன் ட்யூஸ்டே ஆஃபர்ஸ். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் TUESDAY M (For Movie) அல்லது TUESDAY F (for Food) என 56789 என்ற எண்ணுக்கு எஸ்ஸெமஸ்ஸினால் நமக்கு ஒரு கோட் கிடைக்கிறது. அதைக் கொண்டு குறிப்பிட்ட சினிமா தியேட்டர்களிலும், ரெஸ்டாரண்ட்களிலும் 1+1 ஆஃபர் செல்கிறது. இது கிட்டத்தட்ட ஒரு வருடமாக சென்று கொண்டிருந்தாலும் இந்த மாதம்தான் அதை உபயோகிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 150 ரூபாய்க்கு இரண்டு சினிமா டிக்கெட்டுகளும், 350 ரூபாய்க்கு 2 பீட்சாக்களும் குறைவில்லை தானே. முயற்சித்துப் பாருங்களேன். இந்த ஆஃபரின் கீழ் வரும் ரெஸ்டாரண்ட்களும் மூவி ஹால்களும் இங்கே. (பல தோழிகளை வைத்துக் கொண்டு பர்ஸ் வெயிட்டை யோசித்துக் கொண்டிருக்கும் சகாக்கள் செவ்வாய்க் கிழமைகளில் பட்டையைக் கிளப்பலாம்)

*************************************************************************************************************

வர வர ப்ளாகோமேனியா முத்திப் போய் அலையுறேன். எப்போது எதைப் பார்த்தாலும் அதை எப்படி எழுத்து நடையில் கொண்டு வருவது என்ற யோசனையாகவே உள்ளது. பதிவெழுதுவதற்காகவே புது ரெஸ்டாரண்ட்களையும், புது ரக உணவுகளையும் முயற்சிக்கத் தோன்றுகிறது. எப்போதும் யோகியிடம் “யோகி இந்த டாபிக் வெச்சு எப்படி எழுதலாம்” என ஆலோசனை கேட்கிறேன். ஏதாச்சும் கான்செப்ட் கிடைச்சா நைட்டெல்லாம் யோசிச்சுட்டே தூங்கிப் போய் பதிவு கனவுலேயே பில்டப் ஆகிடுது. யார்கிட்டே பேசினாலும் புத்தகங்களையோ, எழுத்துகளைப் பத்தியோ பேசத் தோணுது. யோகி பாவம். என்னை வெச்சுக்கிட்டு ரொம்பக் கஷ்டம் தான். (ஓவரா முத்திப் போய் ரோடுல திரியாம இருந்தா சரி தான்)

*************************************************************************************************************

சில நாட்களுக்கு முன்பு ராவண் படம் பற்றிய தொகுப்பு ஹிந்தி செய்தி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதில் வந்த நடனக் காட்சி ஒன்றில் அபிஷேக் பச்சன் ஆடிக் கொண்டிருந்தார். என்னுடனிருந்த சக நண்பர்கள் அதை “ஆ”வெனப் பார்த்துக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஒருவர் சொன்னார். “அபிஷேக் பச்சன் இதுவரைக்கும் எந்த படத்துலையாச்சும் ஆடிருக்காரா... அவரையும் ஆட வைக்க மணிரத்னமாலத்தான் முடியும். மணிரத்னம் க்ரேட்யா” உண்மையா? (தமிழனை இவங்க புகழ்றதுலேயும் குறைச்சலிருக்காது. அவன் கிட்ட வேலையைப் பிழியறதுலேயும் குறையிருக்காது)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

போன வாரம் நாங்க உக்காந்து படம் பார்த்துட்டு இருந்தப்போ டேபிள்ல என் கை லேசா இடிச்சிடுச்சு. “ஆ”ன்னு ஒரு சவுண்ட் குடுத்ததும் யோகி என் கையில தடவிக் குடுத்துட்டு டேபிளை லேசா அடிச்சிட்டு சொன்னார். “இது தான் கல்யாணமாகி 2 வருஷத்துல இருக்குற எஃபெக்ட். 20 வருஷமாச்சுன்னா, இடிச்ச டேபிளைத் தடவிக் குடுத்து, என்னால தான் முடில இதாச்சும் தைரியமா உன்னை அடிக்குதேன்னு சந்தோஷப்பட்டுட்டு, உன்னை பார்த்து உக்கார மாட்டியான்னு திட்டிட்டுப் போயிடுவேன்”. ஙே! (20 வருஷத்துக்கப்புறம் நான் எப்படி இருப்பேன்னு தெரியாமப் பேசுறார். அப்பிராணி.)