Wednesday, July 15, 2009

காதல் கதை - 1




ரம்யா, சுத்தமான தயிர் சாதம் என்பது முகத்திலேயே தெரியும். அக்ரஹாரத்து பொண்ணு. படிப்பது பன்னிரெண்டாம் வகுப்பு. வளர்த்தியான, உயரத்துக்கு ஏற்ற உடம்பு கொண்ட அழகான, அளவான தேகம். படிய வாரப்பட்டு பாதியில் ரிப்பன் கட்டிய இரட்டை ஜடை. அதன் ஒரு பக்கத்தில் தொங்கும் அடர் மல்லிகை. அரக்கு கலர் பாவடைக்கு பொருந்தும் பிங்க் நிற தாவாணி தான் பள்ளி சீருடை. அவள் "போயிட்டு வர்றேன்மா" என்று சொல்லும் போதே தெரு பசங்களெல்லாம் வெளியே வந்து எதேர்ச்சையாக நிற்பது போன்றோ அல்லது வீட்டினுல்லிருந்தோ அவளைப் பார்ப்பதோ அவளுக்குத் தெரியாது, அவள் தோழி பானு சொல்லும் வரை.

பானு ஹரியின் தங்கை. ஹரி தான் அவளை ரம்யாவிடம் அனுப்பினான், தன்னை ரம்யாவிடம் அறிமுகப்படுத்தும் படி. அவன் வழிந்த அசடில் "ஹாய் அண்ணா" என தன்னை அறிமுகம் செய்து கொண்டு கிளம்பினாள். பானு ஹரியைப் பரிதாபமாகப் பார்த்தாள். ஹரி அவளை முறைத்து "அண்ணா" என்பது "ஏன்னா" என மாற எவ்வளவு நாளாகப் போகுது என தனக்குத் தானே சமாளித்து சென்றான். பானுவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லைஎனினும் அண்ணின் குட்டுக்கு பயந்து வாயை மூடிக் கொண்டு உள்ளே சென்றாள்.

நாட்கள் நகர்ந்தன. தெரு முழுவதும் அல்லோலகல்லோலப்பட்டது. காரணம் எதிர் வரும் பொதுத் தேர்வுகள். தெருவிலிருந்து மொத்தம் பதினான்கு பேர் ஒரே நேரத்தில் தேர்வை எதிர்கொண்டனர். போட்டி அதிகமான நேரத்தில் பானு ரம்யாவிடம் அதை சொல்லியிருக்க வேண்டாம் தான். ஆனால் பெண்களுக்கு எதை எப்போது பேசுவதென்ற புத்தி எப்போது இருந்திருக்கிறது. ரம்யாவை தன வீட்டிற்கு அழைத்தாள் பானு.

"சொல்லு பானு, என்ன திடீர்னு அவசரமா வர சொன்ன? ட்யூஷனுக்கு லேட் ஆறதுடி"

"இல்லடி உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல."

"என்னாச்சு பானு? எதுவும் பாடத்துல உனக்கு போயிடுத்தா... உங்க அம்மா கிட்ட பேசணுமா..."

"ஐயோ, அதெல்லாம் இல்ல. எங்க அண்ணாக்கும் எதிராத்து கார்த்திக்கும் நேத்திக்கு சண்டைடி. அண்ணா மேல கை வெச்சிட்டான்.அவன் இன்னிக்கு காலேஜ் போல."

"ஐயோ என்னாச்சுடி அண்ணாக்கு"

"ஒன்னும் இல்லை. அவன் சரி ஆகிடுவான். ஆனா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அதான் வர சொன்னேன். ஆத்துல யாரும் இல்ல. அதான் இப்போவே சொல்லிடலாம்னு. நீ எதுவும் குறுக்க பேசாத. நான் சொல்றத மட்டும் கேளு. எதிராத்து கார்த்தி உன்னை லவ் பண்றானாம். என் அண்ணா தற்செயலா உன்னைப் பத்தி ஏதோ சொன்னதுக்கு 'அவளைப் பத்தி நீ ஏண்டா பேசற' னு அவனை அடிச்சுட்டான். அவன் உன்னையும் ஏதாவது வம்பிளுக்கலாம். அதான் உன்கிட்ட சொல்லி வைக்கலாம்னு கூப்பிட்டேண்டி ரம்யா. பீ கேர்புல்."

ரம்யாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வந்த அழுகையை அடக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

'என்ன செய்வேன் இப்போது. ஐயோ, அவன் என் கையப் பிடித்து இழுத்து விட்டால்? ஒரு வேளை என்னை பாலோ செய்வானோ. ஸ்கூலில் டீச்சருக்கு தெரிந்தால் திட்டுவாளே'. அவ்வயதிற்கே உரிய அத்தனை இம்மச்சூரிட்டியும் சேர்ந்து அவளை என்னென்னவோ சிந்திக்க வைத்தன. அடுத்த நாள் படித்த கெமிஸ்ட்ரி பாடத்திலிருந்த எந்த சமன்பாடுகளும் மண்டையில் ஏறவில்லை. அழுகையாய் வந்தது. அன்று மாலையே பானுவின் வீட்டிற்குப் போனாள்.

"பானு, நான் கார்த்தி கிட்ட பேசணும். நீ உங்க அண்ணாகிட்ட சொல்லி அவன் கிட்ட சொல்ல சொல்லு. நான் நாளைக்கு நம்ம பெருமாள் கோவில்ல நடை சாத்தினதுக்கப்புறம் மூணு மணிக்கு அவனை பாக்கறேன்" சொல்லி விட்டு அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாவிட்டாலும் அவள் சொன்னதை அப்படியே அண்ணன் மூலம் கார்த்தியிடம் சேர்த்தாள் பானு.

அடுத்த நாள். மாலை மூன்று மணி "ரம்யா, நீங்க என்னை வர சொன்னேளாமே."

"வாங்கோ கார்த்தி. நான் உங்க கிட்ட இதுக்கு முன்னாடி பேசினதே இல்லை. ஏன் நீங்க எனக்காக ஹரி அண்ணாவை அடிச்சேள்..."

"அது வந்து... வந்து...." "நீங்க ஒன்னும் சொல்ல வேணாம். எல்லாம் பானு என்கிட்டே சொன்னா. இங்கே பாருங்கோ நான் இப்போ +2. அடுத்த வருஷம் இன்ஜினியரிங் போகணும். தேவையில்லாம என்னென்னவோ ஒளரிண்டு இருக்காதேள். அப்புறம் நான் மாமி கிட்ட சொல்லிடுவேன்"

"ஐயோ வேணாம். சாரி. இனி நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா, நீ என்கிட்டே இவ்ளோ கோவிச்சுக்காதையேன். Let us be friends at least. "

அவனின் செல்லக் கொஞ்சலை இவளால் மறுக்க முடியவில்லை.

"OK, But only friends. Bye for now. ஆத்துக்குப் போனும். அம்மா தேடுவா."

தூரத்திலிருந்து பார்த்தவளை இனி தோழியாகப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவனுக்கு. கார்த்தியைப் பற்றி சொல்லவில்லையே. நல்ல உயரம், மாநிறம், உயரத்திற்கு கொஞ்சம் குறைவாய் உடம்பு, யாரையும் எளிதில் வசீகரிக்கும் கண்கள், இன்ஜினியரிங் மூன்றாம் வருடம்.

தேர்வுகள் வந்தன, அதைத் தொடர்ந்து முடிவுகளும். 94% மதிப்பெண்களுடன் மதுரையிலுள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தாள். அதே நேரத்தில் அவர்கள் நட்பும் நன்றாகவே நெருக்கமடைந்திருந்தது. மதுரைக்கு அவள் போக ஒரு வாரமே இருந்த நிலையில் ரம்யா கார்த்தியை சந்தித்தாள்.

"கார்த்தி, உங்க கிட்ட ஒன்னு சொல்லணும். ஆனா, எப்படி சொல்லனு தெரியல. ஆனா, சீக்கிரமே சொல்லிடறேன்"

"என்ன ரமி, எதுவும் பிரச்சனையா... ஆத்துல அம்மா கூட எதுவும் சண்டையா..."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல கார்த்தி. நான் உனக்கு அப்புறம் போன் பண்றேன்."

"ஓகே ரமி" என்று அவளை அனுப்பி விட்டு பாக்கெட்டிலிருந்த வில்சை எடுத்துப் பற்ற வைத்தான். சாயங்காலம் ஆறு மணிக்கு அம்மா கோவில் போனதும் அவனுக்கு போன் செய்தாள்.

"கார்த்தி உன்கிட்ட ஒன்னு சொல்லணும்"

"சொல்லு"

"என்னை எப்போ கல்யாணம் பண்ணிக்குற?"

"என்ன சொன்ன...."

"அம்மா வந்துட்டா. நான் அப்புறம் பேசுறேன்" போனை வைத்து விட்டாள்.

அவனுக்கு கை கால் ஓடவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மறுபடியும் அவள் வீட்டுக்கு போன் செய்தான். "ஹலோ" அவள் குரல் தான் என ஊர்ஜிதப்படுத்தி விட்டு

"ஒரே ஒரு தம் அடிச்சுக்கட்டுமா.... ரொம்ப நர்வசா இருக்கு" "ம்ம்" போனை வைத்து விட்டாள்.

"யார் ரம்யா போன்ல?" அம்மா உள்ளேயிருந்து.

"தெரிலமா. ராங் நம்பர்." இது போல் அடிக்கடி ராங் கால்கள் வந்த போதிலும் மகள் மேலிருந்த நம்பிக்கையின் காரணமாக அவள் அம்மா எதுவும் கண்டு கொள்ளவில்லை. இதற்கு நடுவில் அவர்கள் பெருமாள் கோவில் சந்திப்பு, அவ்வப்போது அடுத்த ஊரில் ஓரிரண்டு படங்கள், தலையில் முக்காடு போட்ட இரு சக்கர வண்டிப் பயணம் என அவ்விருவரின் காதல் நான்கு வருடங்கள் அவள் இன்ஜினியரிங் முடிக்கும் வரை நன்றாகப் போனது. மதுரையில் அவர்கள் சுற்றாத இடம் இல்லை. இதற்கு நடுவில் வீட்டிற்கு தெரிந்தும் இவள் சமாளித்திருந்தாள். ஒரு முறை அவள் விடுதியிலிருந்து அவனுக்கு எழுதிய கடிதம் அவன் அம்மாவின் கையில் கிடைக்க வீடே ரெண்டாகிப் போனது. அவனும் எப்படியோ சமாளித்திருந்தான்.

இப்போது இருவரும் வேலைக்குப் போயாகி விட்டது. அவன் புனேயிலும், அவள் பெங்களூரிலும் நல்ல சம்பளத்தில் பொறுப்பான வேலை. வீட்டில் சொல்லி விடலாம் என அவள் வீட்டுக்குப் போன நாளொன்றில் அவளைப் பெண் பார்க்க வந்திருந்தனர். அவளுக்கு என்ன சொல்வது, எப்படி சமாளிப்பதேன்றே தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக பெண் பார்க்க வந்திருந்தவர் பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும் என அழைக்க, அவரை "அண்ணா" என்றழைத்து தன் விருப்பத்தை இலைமறை காயாக சொல்லி முடித்து விட்டாள்.

அடுத்த சம்பந்தம் வருவதற்குள் இரு வீட்டிலும் காதலை சொல்லி, வழக்கம் போல் முதலில் பெற்றோர் எதிர்க்க, பின் சம்மதித்து நன்றாக திருமணம் முடிந்தது. இப்போது அவர்களிருவரும் பெங்களூரில் 'சவிதா' எனும் குழந்தைக்கு நல்ல பெற்றோராகவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதில் ஒருவரையொருவர் மிஞ்சும் வகையிலும் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதால் பெற்றோருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்போதும் அம்மா வீடும் மாமியார் வீடும் ஒரே தெருவில் இருந்தாலும் மாமியாருக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் ரம்யா, மாமியார் மெச்சும் மருமகளாகவே உள்ளாள். அவளைப் பார்த்து பார்த்து பெருமைப்பட்டுப் போவான் கார்த்தி. அவர்கள் காதல் ஜெயித்ததில் அவர்களைப் போலவே எங்களுக்கும் மகிழ்ச்சி. அடுத்த பதிவில் தாராவின் காதல் தோல்வியுடன் சந்திப்போம்.

19 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

குட் நல்ல வேளை காதல தோக்கடிச்சுருவீங்களோன்னு நினைச்சேன்.. தொடரட்டும்......

தினேஷ் said...

அக்கா ஆட்டம் ரெடியா .. நல்ல வேளை பாவிமக்கா ஒரே காதல் தோல்வியா எழுதுற வேளையில ஜெயிச்ச காதல சொல்லியிருக்கிய ..

அப்போ அந்த ஹரி என்ன ஆனாரு ?
ஊருகாயா இவங்க ’கா’வுக்கு ..

நேசமித்ரன் said...

எளிமையா அம்மாவோட லெட்டர் படிக்கிற மாதிரி ஒரு நடைங்க
பருத்தி சேலைய போத்திட்டு தூங்கற மாதிரி ஒரு நல்ல பீல் குடுக்குது படிச்சு முடிச்சதும்

துபாய் ராஜா said...

அப்ப ஹரி இலவு காத்த கிளியா ??!!

சம்பத் said...

கதை நடை அருமை....

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா இருக்குங்க.. தொடருங்க..

kanagu said...

நல்லா எழுதியிருக்கீங்க :) சூப்பரா இருந்துது.. :)

ஆனா ஹரிய அம்போ-னு விட்டுடீங்களே......

*இயற்கை ராஜி* said...

விருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்க‌

Kumar.B said...

story flow is good

Kumar.B said...

good

விக்னேஷ்வரி said...

நன்றி வசந்த்.

நன்றி சூரியன். அதுக்கப்புறம் ஹரி நிறைய பொண்ணுங்களுக்கு அண்ணாவாகிட்டாரு. எல்லாம் ரம்யாவின் ராசி. :)

மிக்க நன்றி நேசமித்திரன்.

வாங்க துபாய் ராஜா.

நன்றி சம்பத்.

நன்றி குறை ஒன்றும் இல்லை.

நன்றி கனகு.

விருதுக்கு நன்றி இயற்கை.

நன்றி குமார்.

ian said...

I wish i could read your blog. It really looks very interesting.

Any way please do drop by any of my sites....

dreamsofabrownman.blogspot.com
iandelapena.multiply.com
maniladigital.blogspot.com

Nithi... said...

Intha Kadai mulama neenga enna solla vareenga??

Love venum ma ilai

vendam ma??

Lavanya said...

very nice story

Lavanya said...

very nice story

Gulf India Welding Institute said...

ida madiri ellaroda nalla kadalum jeikanum nu na god kita praypanekirean

mubarak said...

inthe kathai pache poi

mubarak said...

inthe kathai pache poi

arthanari said...

MMMMMMMM SUPER LOVE I LIKE YOU