Wednesday, July 16, 2008

தவறு பெண்களிடம், குற்றம் ஆண்கள் மீதா...

மகளிர் தினத்தன்று அலுவகத்தில் உட்கார்ந்து ஓர்குட்டை அலசிய போது ஏற்பட்ட விவாதத்தில், தோழி ஒருவருக்கு என் பதில்கள்.

தோழியின் குற்றச்சாட்டு:

இந்த நாட்டுல பெண்கள் மீது நடக்குற எல்லா வன்முறைக்கும் ஆம்பளங்கதான் காரணம்.....
பெண்கள் தான் நாட்டுல பாதி ..ஆனா 33% கொடுக்க அவங்களுக்கு பிடிக்கல....
நாம படிக்கப் போனாம்னா அங்க டிஸ்டர்ப் பண்ரது.......சரி கோவிலுக்கு போனோம்னா பின்னாடி வந்து மணி அடிக்கிறது...
வேலை பாக்குற இடத்துல......வேற வேலை பார்க்குறது...கொஞ்சம் சிரிச்சி பேசிட்டா உடனே கெட்ட பட்டம் கட்டி அடித்தவன்கிட்ட கமெண்ட் அடிக்கிறது.....
சந்தேகப் படுறது.......உளவு பார்க்குறது....பெண்ண மனுசியா நடத்தமா பொருளா பார்க்குறது...
மொத்ததுல.......ஆண்கள் எல்லாருமே கெட்டவங்க தான்...

விக்னேஷ்வரியாகிய எனது பதில்:

இந்த நாட்டுல பெண்கள் மீது நடக்குற எல்லா வன்முறைக்கும் ஆம்பளங்கதான் காரணம்.....//

மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, பெற்ற தாயே பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்வது இவை எல்லாம் ஆண்களால் நடத்தப்படுகின்ற வன்முறைகள் இல்லையே...

பெண்கள் தான் நாட்டுல பாதி ..ஆனா 33% கொடுக்க அவங்களுக்கு பிடிக்கல....//

கொடுக்க மாட்டேன் சொல்ற ஆண்கள் எத்தனை சதவிகிதம்? இன்னிக்கு உங்கள இவ்வளவு பேச விட்டு, அதற்கு தக்க விளக்கங்கள் தர்ற ஆண்கள் இருக்காங்க தானே.

ஆமாங்க, பெண்கள் மதிப்பெண்களும் நிறைய எடுத்து, இட ஒதுக்கீடும் வாங்கிகிட்டா, அப்புறம் அவங்க பாடு திண்டாட்டம் இல்லையா.... ;)


நாம படிக்கப் போனாம்னா அங்க டிஸ்டர்ப் பண்ரது.......சரி கோவிலுக்கு போனோம்னா பின்னாடி வந்து மணி அடிக்கிறது...//

படிக்கப் போன இடத்தில, பொண்ணுங்க படிக்கப் போற மாதிரி போனா எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க நடிக்கப் போற மாதிரி இல்ல போறாங்க.புத்தகத்தில, கணக்கு போட சொன்னா, தன்னை எத்தனை பேர் பாக்குறாங்கனு கணக்கு போடுற பெண்களை நான் உங்களுக்கு காட்டவா?கோவிலுக்கு போகும் போது கூட ஒழுங்கா உடுத்திட்டு போக பொண்ணுங்களுக்கு தெரியலையேனு நானே பல முறை நினைச்சிருக்கேன். சாமி கும்பிட போகும் போது எதுக்குங்க ஜனனல் வச்ச பிளவுஸ்?


வேலை பாக்குற இடத்துல......வேற வேலை பார்க்குறது...கொஞ்சம் சிரிச்சி பேசிட்டா உடனே கெட்ட பட்டம் கட்டி அடித்தவன்கிட்ட கமெண்ட் அடிக்கிறது.....//

வேலை இல்லாம, அடுத்தவங்க வேலையை கெடுக்கனே ஒரு கூட்டம் அலையுது. அதில் பெண்களும் இருக்காங்க. அந்த பெண்களும் கூட வேலை பாக்குற பெண்களை தவறா சொல்ல தான் செய்றாங்க. உண்மையா இல்லையா?


சந்தேகப் படுறது.......உளவு பார்க்குறது....பெண்ண மனுசியா நடத்தமா பொருளா பார்க்குறது...//

புருஷன் வேலைக்கு போய்ட்டு வந்த உடனே, அவன் சட்டை, பேக், கார்னு செக் பண்ற பெண்கள் இல்லையா? இதுக்கு பேர் சந்தேகம் இல்லாம என்ன? அது சந்தேகம் இல்லை, Pocessivenessனு நீங்க சொன்னா அதே Pocessiveness ஏன் ஆண்களுக்கும் இருக்க கூடாது?

மொத்ததுல.......ஆண்கள் எல்லாருமே கெட்டவங்கத்தான்.. //

நிறைய நல்ல ஆண்கள் இருக்காங்க. அவங்கள நல்லவங்களாவோ, கெட்டவங்களாவோ பாக்குறது, பெண்ணின் பார்வையில் தான் இருக்கு.