தராசு மட்டும் தான் விதிகள் போடுவாரா... நாங்களும் எதிர்ப் பதிவா விதிகள் போடுவோம்ல.
கணவராயிருக்கப் பத்து விதிகள்.
1. எதை நாசூக்கா சொன்னாலும் புரியாதா உங்களுக்கு. மூஞ்சிக்கு நேரா நீங்க ஒரு மக்குன்னு சொல்லி உங்க முகம் போற கோணலைப் பார்க்க வேண்டாம்னு நினைச்சா வேற வழி இல்லை போலவே.
2. "உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்" ன்னு நாங்க உருகி காதல் மொழி பேசும் போது "அப்போ ஒரு கப் டீ போட்டுக் கொடேன்" ன்னு உங்களால மட்டும் எப்படி எடக்கு மடக்கா யோசிக்க முடியுது.
3. தினம் தினம் நாங்க சமைக்குறதை சப்புக் கொட்டி சாப்பிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாம போற நீங்க, எப்போவோ அதிசயமா பிரட் டோஸ்ட் பண்ணிட்டா மட்டும் அதை புகழ்ந்து ரசிச்சு சாப்பிடுற சூட்சுமம் என்னன்னு புரிய மாட்டேங்குது.
4. நாங்க முக்கியமான விஷயம் சொல்லும் போது மட்டும் அதை விட முக்கியமா பேப்பர் படிக்குற மாதிரி நடிக்குறீங்களே. அந்த பொல்லாப்பு ஏன்...
5. காலைல வீட்டுல ரெண்டு பேரும் உருண்டு புரண்டு சண்டை போடாத குறையா ஒருத்தரையொருத்தர் திட்டி சண்டை போட்டு, அவங்கவங்க ஆபிஸ் போயிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் ஒண்ணுமே நடக்காத மாதிரி "அந்த கடலை பக்கோடா நல்லா செய்வியே, அதை இன்னிக்கு செய்யேன்" ன்னு கூசாம எப்படி கேக்க முடியுது....
6. எப்போவாவது உடம்பு முடியலை, சமையல் எப்படிப் பண்றதுன்னு சொல்றேன் சமைச்சிடுங்கன்னு சொன்னா, ஒரு மார்க்கமா தலையாட்டிட்டு அடுக்களையையே அமர்க்களம் பண்ணி வேலையை இரு மடங்காக்கி வைக்குறீங்களே, எங்களை பார்த்தா உங்களுக்குப் பாவமா இல்ல.
7. ராத்திரி மூணு மணி வரைக்கும் (ஓ, அது அதிகாலையா, சரி ராத்திரிக்கும் அதிகாலைக்கும் நடுவுல ஒரு நேரத்துல) உக்காந்து ஆபிஸ் வேலையை செய்யுற நீங்க, எப்போவாச்சும் பத்து மணிக்கே தூங்கினாக் கூட அடுத்த நாள் காலைல எழுந்து வாக்கிங் போக மாட்டேங்குறீங்களே, ஏன்...
8. நியூஸ் பேப்பர்ங்குற விஷயம் கண்டுபிடிக்கப்பட்டதே உங்களுக்காக மாதிரி நேரம் காலமில்லாம அடுத்த நாள் பேப்பர் வர்ற வரைக்கும் வரிவரியா முந்தின நாள் நியூஸ் பேப்பர் படிக்குறீங்களே. அப்படி அதுல என்ன தான் இருக்குன்னு எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
9. கடைக்கு சாமான் வாங்கப் போகும் போது குடுக்குற லிஸ்ட்டை வாங்கிட்டு வர்றீங்களோ இல்லையோ, புதுசா எது எதையோ வாங்கிட்டு வந்து குவிக்குறீங்களே, எப்போவாவது அடுப்படி ஷெல்ஃபும், ஃப்ரிட்ஜும் நிறைஞ்சு வழியுதே எங்க வைப்போம்னு தோணியிருக்கா.....
10. நாங்க வெளியூர் போயிட்டு வீட்டுக்குள்ள நுழையும் போது வீடு இருக்குற அலங்கோலத்தைப் பார்த்திட்டு எங்க கிட்ட அசடு வழியுற நீங்க, சாதாரண நாட்கள்ல கீழே ஒரு பேப்பர் இருந்தா கூட என்னமோ பெரிய கொலையே நடந்திட்ட மாதிரி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்குறது ஏன்...
உங்களைப் பத்தி சொன்னா, பத்து விதிகள் போதல. அதுனால பத்துக்கு ஒன்னு இலவசமா இன்னொன்னும் சேர்த்துக்கலாம்.
நாங்க சந்தோஷமா ஏதாவது சொன்னாலும், சீரியஸா சொன்னாலும், சோகமா சொன்னாலும், காமெடியா சொன்னாலும் கூட உங்க ஃபேஸ் ரியாக்ஷன் சேன்ஜ் ஆகாம மங்குனி மாதிரி ஒரே எபெக்டா இருக்கே, அதுல இருக்குற வில்லத்தனம் என்ன...